Thursday 28 January 2016

சித்தர்கள் உணர்ந்த அண்டக்கல்

சித்தர்கள் உணர்ந்த அண்டக்கல்
#############################
( பகுதி - 1)
என்னுரை!
அன்பு நண்பர்களே!
மனிதனது தேடலுக்கான தூண்டு கோலும்,
தேடலுக்கு வழி காட்டுவதும், தேடப்படும்
பொருளும் ஒன்று மட்டுமே, அது
இயற்கைதான். இயற்கை மனிதனது தேடலைத்
தூண்டி தன்னைத் தானே மனிதனது வடிவில்
உணர்ந்து ஆனந்தம் கொள்கின்றது.
சித்தர் விஞ்ஞானத்தையும் அவர்கள் மனித
இனத்திற்கு இடைவிடாது கொடுத்துக்
கொண்டே இருக்கின்ற அறிவையும், நாம்
உணர்ந்து கொள்வதில் மிகவும்
பின்னடைந்திருக்கின்றோம். சித்தர்கள்
உணர்ந்தது பல்வேறு துறைகளில்
என்றிருந்தாலும் அதாவது மருத்துவம்,
ரசவாதம், மாயம், மந்திரம், யோகம் இப்படி பல
வகைகளாக இருந்தாலும் இவை
எல்லாவற்றிற்கும் ஒரு அடிப்படையான
மூலமான கண்டுபிடிப்பு இருந்தது.
சித்தர்கள் பாடல்களைப் படிப்பவர்களுக்கும்,
சித்தர்களின் விஞ்ஞானத்தை ஆராய்பவர்களுக்க
ும் ஒரு உயர் ரகமான புரியாத விசயம்
அண்டக்கல்.
ஆம், பிரபஞ்சத்தின் சக்தியையும் அதன்
ஆற்றலையும் உள்ளடக்கிய அண்டக்கல் ஒன்று
உண்டு என்பதனையும். இந்த அண்டக்கல்லை
பிரபஞ்சத்தின் விதை எனலாம் என்பதனையும்
கண்டார்கள்.
அந்தப் பிரதானப் பொருளினை பல சித்தர்களும்
பலவிதத்தில் சொன்னாலும் அதனை நாம்
ஒவ்வொருவரும் நமது சிந்தனையின்
வழியிலேயே உணர வேண்டும். இங்கு நான்
கூற வரும் இந்த நுட்பமான விசயம்
அனைவருக்கும் புரியாது. இருப்பினும் இந்த
பிரபஞ்சத்தில் இது போன்ற விசயங்களும்
உண்டு என்பதனை நாம் உணர்ந்தால் போதும்,
இதில் அவர் அவர்களின் தேடுதலின் ஆழத்தில்
அந்த முத்து கிடைக்கும்.
நானும் இங்கு அதனை சில குறிப்புகளின்
வாயிலாக மட்டுமே உணர்த்தப்போகிறேன்,
அவரவர்களின் புரிதலில் தான் இந்த இரகசியம்
வெளிப்படும். நாம் ஒவ்வொருவருக்கும்
இயற்கையின் அண்டக்கல் பாடத்தைப்
புரிவதற்கு இனிவரும் பகுதிகள் மிகுந்த
ஏதுவாக இருக்கும்.
நன்றி,
என்றும் அன்புடன்,
சி.எம்.ரங்கராஜ்.

பகுதி - 1
=======
சித்தர்கள் உணர்ந்தது என்ன?
1.சித்தர்கள் பாடல்களைப் படிப்பவர்களுக்கும்,
சித்தர்களின் விஞ்ஞானத்தை ஆராய்பவர்களுக்க
ும் ஒரு உயர் ரகமான புரியாத விசயம்
அண்டக்கல். சித்தர்களின் அனைத்து மருந்து,
மாந்திரீகம், சித்து, ரசவாதம் இப்படி எதை
எடுத்துக் கொண்டாலும் அதில்
இடைவிடாமல் சொல்லப்படும் ஒரு விசயம்
இதில் முப்பைச் சேர், அண்டத்தைச் சேர் ,
தத்துவாதிகளின் கல்லைச் சேர்,
ஐங்கோலக்கருவைச்சேர் இப்படி பல
பெயர்களில் ஒரு பொருளை மறைத்துக் கூறி
இருப்பார்கள். இதற்கு உரிய பொருளைத்
தெரிந்து உரிய வகையில் அந்தப் பொருளை
செய்து முடிக்கும் வல்லமை கொண்டவர்கள்
சொற்ப எண்ணிக்கையில்தான் உள்ளார்கள்.
அவர்களும் யாருக்கும் இந்த ரகசியத்தைச்
சொல்லவும் மாட்டார்கள்.
2.இந்த அண்டக்கல்லைப் பற்றி நம்
தமிழகத்தில் உள்ள சித்தர்கள் “பரிபாசை”
எனப்படும் மறைமொழியில் இதனை சொல்லி
வைத்ததற்கு காரணம் இல்லாமல் இல்லை.
இதனை புரிந்து கொண்டவர்கள் அனைத்து
சித்துக்களையும் செய்யலாம், இயற்கையின்
சரியான சூத்திரத்தைத் அறிந்து அதனை
தனது கட்டுப்பாட்டில் வைக்கலாம், சாகாமல்
வாழலாம் இன்னும் எத்தனை எத்தனையோ
விசயங்கள் இந்த அண்டக்கல்லைப் பற்றி
உண்டு. அதனால் தான் சித்தர்கள் இதனை
மறை மொழியில் வைத்து விளக்கியிருக்கி
ன்றார்கள் என்று இதனைத் தேடி
அலைந்தவர்களுக்குப் புரியும்.
3.இந்த அண்டக்கல்லைப் பற்றி சித்தர்கள்
குறிப்பிடும் போது, இதன் ரகசியம் யாருக்கும்
புரியாது என்றும், முயற்சி செய்து தெரிந்து
கொண்டவர்கள் யாருக்கும் சொல்லக் கூடாது
என்றும், சொன்னால் சித்தர்கள் சாபம்
அவர்களைப் பற்றும் என்றும் சொல்லி
இருக்கின்றார்கள். இருந்த போதிலும்
தற்போதைய சமூகம் செல்லும் பாதையை
நினைத்துப் பார்க்கும் பொழுது மனித இனம்
அதன் பரிணாம வளர்ச்சியில் அடுத்த
கட்டத்திற்கு செல்ல வேண்டிய ஒரு கட்டாய
நிலை தோன்றி இருக்கின்றது.
4.மனித இனம் பல்கிப் பெருகி உள்ள
சூழ்நிலையில் அதனுடைய இடையறாத
வளர்ச்சிக்காக இயற்கையைப் பயன்படுத்தி
இயற்கை வளங்கள் குறைய ஆரம்பித்து
இருக்கின்றன. எத்தனையோ உயிரினங்கள்
அழிந்தும் போய் விட்டன. உலகிற்கே
வழிகாட்டிய நமது தமிழ் மொழியின் வளங்கள்
அழிந்து கொண்டிருக்கின்றன. தமிழன் நமது
பாரம்பரிய அறிவையும் அவற்றைத் தேடி
வைத்த நமது முன்னோர்களின் வழியை
மறந்தும் மற்ற நவீன உலகின்
முன்னேற்றங்களைத் தான் உண்மை என்றும்
அவையே மனித இனத்தின் வழி என்றும் நம்பி
நமது முன்னோர்கள் கண்டறிந்த அறிவியலைப்
பற்றி உணராது இருக்கின்றார்கள்.
5.ஆகவே நமது தமிழினத்தின்
நன்மைக்காகவும் உலகின் பல பாகத்தில் நமது
தமிழ்நாட்டுச் சித்தர்கள் போன்று தோன்றி
இயற்கையின் அந்த கடைசிச் சூத்திரத்தை
சொன்ன பல சித்தர்களின் நோக்கத்தை எல்லா
வகையிலும் நிறைவேற்ற உபயோகமாக
இருக்கும் என்று நம்பி , அனைத்து உயிர்களின்
நன்மைக்காகவும் இது பற்றி ஒரு
அறிமுகத்தைத் தமிழ் உலகிற்குக் கொடுப்பது
தமிழன்னைக்கு செய்யும் சிறிய காணிக்கை
என்று எண்ணுகின்றேன்.
6.சித்தர்கள் அடைந்த அந்த அண்டக்கல்லின்
சக்தியை கொஞ்சம் சொன்னால் தான் இந்தப்
பகுதிகள் பற்றிய சுவாரசியம் இருக்கும்.
1.இந்தக்கல் பிரபஞ்சத்தின் விதை.
2.இதனைக் கொண்டு எதனையும்
படைக்கலாம்.
3.இதனை உடலுக்கான பிரபஞ்ச மருந்து
என்று சொல்லலாம்.
4.இதனை உயிருக்கான பிரபஞ்ச மருந்து என்று
சொல்லலாம்.
5.இதனை ஆன்மாவுக்கான பிரபஞ்ச மருந்து
என்று சொல்லலாம்.
6.இதனை உலோகங்களுக்கான பிரபஞ்ச
மருந்து என்று சொல்லலாம்.
7.இதனை கனிமங்களுக்கான பிரபஞ்ச மருந்து
என்று சொல்லலாம்.
8.இதனை விலங்குகளுக்கான பிரபஞ்ச மருந்து
என்று சொல்லலாம்.
9.இதனை தாவரங்களுக்கான பிரபஞ்ச மருந்து
என்று சொல்லலாம்.
10..இந்த பிரபஞ்ச விதையைக் கொண்டு
புதிய பிரபஞ்சத்தையே படைக்கலாம்.
11.இது ஒரு அழியாத சக்தி.
12.இறக்காமல் இருக்கலாம் .
13.இளமை மாறாமல் வாழலாம்.
14.ஐம்பூதங்களையும்படைக்கலாம்.
15.ரசவாதம் செய்யலாம்.
7.இன்னும் எத்தனை எத்தனையோ
விளக்கங்களையும் சிறப்பையும் இது
குறித்து சொன்னாலும் ஒரே சொல்லில்
கூறுவது என்றால் இதனை பிரபஞ்சத்தின்
அணைத்து செயல்களையும் உள்ளடக்கிய ஒரு
பிரபஞ்ச சூத்திரம் என்று கூறலாம். இது
எங்கே இருக்கின்றது எப்படி இருக்கின்றது
என்ற ஆவலை அறியமுடிகிறது.
பகுதி - 2
======
1. இந்த பிரபஞ்ச மருந்தை அறிவதற்கு முன்
நாம் இயற்கையைப் பற்றி கொஞ்சம் அறிந்து
கொள்வோம். அண்டக்கல்லைப் பற்றிய
தேடலில் உள்ள ஒவ்வொருவரும் இயற்கையின்
மாணவர்கள். அவர்களுக்கு பாடம் போதிக்கும்
ஆசிரியர் அந்த இயற்கையே தான். அதனால்
இனிவரும் வாக்கியங்களில் நம்மை நாமே
அண்டக்கல் மாணவன் என்று அழைத்துக்
கொள்ளலாம்.
2. அண்டக்கல் மாணவர்களாகிய நாம் முதலில்
இந்த இயற்கையின் போக்கை தினம் தோறும்
உன்னிப்பாகக் கவனித்து வர வேண்டும்.
இயற்கையின் மொழி அமைப்பு வேறு, நமது
மொழி அமைப்பு வேறு. மனிதர்களால்
பயன்படுத்தப்படும் மொழிகள் மனிதன்
நினைப்பவற்றையெல்லாம் பேசி
விடுவதற்கல்ல, நாம் நினைப்பவைகளை
அப்படியே பேசிவிடாமல் மறைப்பதற்குத்தான்
மொழி. அதே போல் இயற்கையின் மொழியை
நாம் முதலில் அது எதனை வெளிக்காட்டுகின
்றது, எதனை மறைக்கின்றது? என்பதனை நாம்
புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். இது
ஒன்றும் அவ்வளவு கடினமான வேலை
அல்ல.
3. இயற்கை மொழியை மனிதமனம் புரிந்து
கொள்ள திருமந்திரத்தின் கீழே சொல்லப்பட்ட
பாடலை நாம் படிப்போம்
மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதற் பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதற் பூதமே.
திருமந்திரம் 2264
அதாவது நாம் மரத்தால் செதுக்கப்பட்ட
ஒருயானையைக் காணும் போது அது
செதுக்கப்பட்ட மரம் நமது கண்ணுக்குத்
தெரியாமல் மறைந்துவிட்டது, செதுக்கப்படாத
ஒரு மரத்தில் யானை மறைந்து இருக்கின்றது.
பரம் எனப்படும் ஆகாயவெளி எனப்படும்
பிரபஞ்சத்தின் திரையை ஐம்பூதங்களும்
மறைத்து இருக்கின்றன, ஐம்பூதங்களை
உணர்ந்தால் பரம் எனப்படும் ஆகாயவெளி
இல்லை, பரம் எனப்படும் ஆகாயவெளியை
உணர ஆரம்பித்தால் அங்கே ஐம்பூதங்கள்
இல்லை. இந்தப் பாடலுக்கு வெளிப்படையாக
பொருள் சொல்லத் தேவையில்லை.
4. இன்னும் விளக்கமாக நாம் இயற்கையின்
முதல் பாடத்தை படிக்க வேண்டும் என்றால்
நம்முடைய ஐம் புலன்களின்
வல்லமையையும் அதன் பலவீனங்களையும்
அறிந்து கொள்ள வேண்டும். பிரபஞ்சத்தின்
மொழியைப் புரிந்து கொள்ள திருமந்திரத்தின்
கருத்தை ஒத்த ஜெர்மன் சித்தர் பாராசெல்சஸ்
பின்வருமாறு கூறுகின்றார்
All Things are concelaed in all one of them all
is the concealer of the rest -- their corporel
vessel, external, visible and movable. -
Paracelsus
எல்லாப் பொருட்களும் எல்லாப்
பொருட்களிலும் மறைந்து உள்ளது, நமது
கண்ணுக்கு வெளிப்படையாகத் தெரியக்
கூடிய ஒரு பொருள் அதில் மறைந்துள்ள மற்ற
எல்லாப் பொருட்களையும் மறைத்து உள்ளது.
அது அந்தப்பொருளின் வெளியே நாம்
உணரக்கூடிய பரு உடல், வெளிப்பகுதி
மற்றும் அதன் நகரும் நிலை.
5. நமது புலன்களில் நமது அறிவு
வளர்ச்சிக்கு மிக முக்கியமானது கண். இந்தப்
புலன் ஆனது ஒரு முழுமை பெற்ற எந்திரம்
கிடையாது. நமது கண்ணால் குறிப்பிட்ட
அதிர்வு அலைகளுக்கு மேல் உள்ள
பொருட்களைக் காண முடியாது, காற்றைக்
காண முடியாது, மிகச்சிறிய நுண்ணிய
பொருட்களைக் காண முடியாது.
அப்படி என்றால், நாம் நமது புலன் கண்
குறைவுடையது என்று உணர்ந்தும், நமது
கண்ணின் இந்தத்திறன் மனிதனின் அன்றாட
போராட்ட வாழ்க்கையை அடிப்படையாகக்
கொண்டு மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. நாம்
எல்லாப் பொருட்களையும் காண்பது நமது
கண்ணினால் அல்ல என்பதையும் வேறு
எதனால் நாம் ஒரு பொருளை பொருளாக
உணர்கின்றோம் என்பதையும் நாமே சிந்தித்து
அறிய வேண்டும்.
பகுதி - 3
=======
1. அண்டக்கல் மாணவர்களாகிய நாம்
இதுவரை நமது கண் ஒரு குறைப் புலன்
என்பதைப் பற்றிப் பார்த்தோம். நமது கண்
மட்டும் அல்ல நமது காது, மூக்கு, தோல்
இவையும் ஒரு குறைப்புலன்கள் தான் என்ற
அளவில் தெரிந்து கொண்டால் போதும். இது
பற்றி விளக்கமாக ஒரு முடிவுக்கு வர
விவாதம் ஏதும் வேண்டாம் நமது அண்டக்கல்
பற்றிய கற்றலுக்கும், அண்டக்கல் பற்றிய
அறிவை அடையவும் அது வேகம் சேர்க்காது.
2. அடுத்து நாம் இயற்கை பற்றி சில
புரிதல்களுக்குள் செல்வோம். இயற்கை
என்பதை புரிய முற்பட்டால், அதனை இப்படி
சொல்லலாமா? அது தான் கடவுள், இயற்கை,
இறை, பரம்பொருள் அல்லது நம்மை
அடிமைப்படுத்தி வைத்திருக்கும் சூத்திரதாரி
அல்லது அழகான கற்பனை, இப்படி அவரவர்
மனநிலைக்கு ஏற்றாற்போல் சொல்லிக்
கொண்டே போகலாம் .
3. இப்படிச்சொல்லலாமா? இயற்கையானது
தனது இயற்கையால் குதூகலிக்கின்றது.
இயற்கை ஆனது இயற்கையால்
ஆக்கப்பட்டுள்ளது, அது தன்னை
மேம்படுத்துகின்றது, குறைவுபடுத்துகி
ன்றது, இயற்கையானது இயற்கையைவிட
மேலானது, இயற்கைக்குச் சமம் இயற்கையே.
இதனைப் பின்வருமாறு கூறலாம்.
Nature enjoys its Nature, Nature contains
Nature, improves Nature, reduces Nature,
Nature is superior to Nature.
4. அண்டக்கல் மாணவர்களின்
ஒவ்வொருவருடைய ஆரம்பப் பாடமும்
இயற்கையை கூர்ந்து நோக்கல் என்பதில்
இருந்து தான் ஆரம்பிக்கின்றது. அண்டக்கல்
மாணவனுடைய இலக்கு அண்டக்கல்லை
அடைதல். ஏன் எனில் அண்டக்கல் மாணவனது
செயல் இயற்கையை அடிப்படையாகவே
கொண்டது.
5. அண்டக்கல் மாணவன் இங்கு
கற்றுக்கொள்ளப் போகின்ற முக்கியமான
விசயம் என்னவென்றால்
"அண்டக்கல் கலையானது இயற்கையை நகல்
எடுத்து, இயற்கையின் செயல் முறையை
விரைவு படுத்துதல் ஆகும். அதாவது
இயற்கையை காப்பியடித்து இயற்கையின்
வேலையை விரைவாக நாம் நினைக்கும்
வழியில் செய்ய இயற்கைக்கு வழிவகுத்தல்
ஆகும்"
"It is the art of imitating and accelarating
nature .It is a natural and art of science .We
do not make any thing, all we do is provided
a condition for nature to do what nature
does. So the philosopher's stone is not really
made by the student, and it is made by the
Nature."
6. ஆகவே முதலில் நாம் இயற்கையை உணர
முற்படுவோம். இயற்கையானது ஆண், பெண்
சக்தியாக இயங்குகிறது. பிரபஞ்சத்தில் உள்ள
எல்லாப் பொருட்களும் இந்த ஆண், பெண் சக்தி
விதிக்கு உட்பட்டே இயங்குகின்றது. எல்லாப்
பொருட்களிலும் இந்த ஆண், பெண் சக்தி
அடங்கி இருக்கின்றது. அதாவது யின், யாங்
என்று இந்த சக்தி அமைப்பைச்
சொல்லுவார்கள்.
7. இந்த ஆண் பெண் சக்தி அமைப்பானது
ஒவ்வொரு பொருள், உயிர் மற்றும் உயிரற்றது
என்று நாம் நினைக்கும் அனைத்து
இயக்கங்களிலும் அடங்கி இருக்கின்றது. அந்த
ஆண் பெண் சக்தி அமைப்பானது 50/50 என்ற
விகிதத்தில் கண்டிப்பாக ஒவ்வொரு
இயக்கத்திலும் கிடையாது. மாறாக ஒன்றின்
மீது ஒன்று ஆதிக்கம் செலுத்தி இயங்கி
வருகின்றது. அதனால் தான் மனிதர்களைக்
கூட யாரும் ஒரு முழு ஆணும் அல்ல, ஒரு
முழு பெண்ணும் அல்ல என்று கூறுவார்கள்.
இதனை உணர்த்தவே சிவனை
“அர்த்தநாரீசுவரர்” எனும் ஆண், பெண் சக்திக்
கலப்பாக உருவகப்படுத்தினார்கள்.

இதை வெளியிட்ட sibielixir.blogspot.com க்கு நன்றி 

2 comments:

  1. இந்தப் பதிவுகளை வெளியிட்ட sibielixir.blogspot.com க்கு நன்றி என்று போடலாமே.

    ReplyDelete