Thursday 28 January 2016

சதுரகிரியில் 3247 வருடங்களுக்கு முன் நடந்த யாகம்!

அகத்தியப் பெருமானின் உத்தரவால், அவர் மேற்பார்வையில் பல யாகங்களை இந்த உலகத்துக்காகவும், இவ்வுலக மாந்தர் செழிப்பாகவும் வாழ்ந்திட நாடியில் வந்து அருளியுள்ளார். அவை ஒவ்வொன்றும் நடந்து முடிந்தவுடன், ஒன்றைவிட மற்றொன்று மிகச்சிறப்பாக நடந்தேறியது கண்டு பலமுறை வியந்துள்ளேன்.
அப்படி ஒருநாள், சதுரகிரியில், குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட முஹுர்த்தத்தில், அதற்கென நான்கு வேதங்களை பயின்று தொண்டாற்றிவரும் நான்கு பேரையும் காட்டித்தந்து, யாகத்தில் சேர்க்க வேண்டிய மூலிகைகளை அறிவுறுத்தி போகச்சொன்னார். என் உடல் நிலை சதுரகிரி ஏற உதவுமா என்கிற சந்தேகம் இருந்ததால் நான் செல்வதை பற்றி சற்று கவலையுடன், அதே சமயத்தில் வருத்தத்துடன் அவரிடம் தெரிவித்தேன்.
"உன் சார்பாக வேறு ஒருவரிடம் அந்த தகுதியை கொடுத்து அனுப்பி மேற்பர்வையிடச்சொல், சொன்னபடி செய்யவேண்டும், எந்த தவறும் நடக்ககூடாது" என்றார்.
அவரே, காட்டித்தந்த நண்பரை அழைத்து, " இது அகத்தியர் உத்தரவு. உங்களிடம் இந்த பெரும் பொறுப்பை கொடுத்துள்ளார். எப்பாடுபட்டேனும் இதை சிரம் மேற்கொண்டு நடத்திக் கொடுக்கவேண்டும்" என்று வேண்டிக் கொண்டேன்.
நண்பரும் அதை சிரம் மேற்கொண்டு செய்வதாக கூறி அதற்கான ஏற்பாடுகளை அவர் நண்பர் வாயிலாக, அகத்தியர் அடியவர்கள் துணையுடன் ஏற்பாடு செய்தார்.
சுமார் ஒரு 50 பேர் அடங்கிய குழு சதுரகிரியை நோக்கி பயணம் செய்தது.
சதுரகிரி மலை என்பது மிக கடினமான பாதைகளை உள்ளடக்கியது. தனி ஒரு மனிதனாக எறிச்சென்றாலே, மேலே சென்றடைந்ததும், ஒரு வழியாகி, எங்கேடா இடம் கிடைக்கும், சற்று நேரம் கிடந்தது உறங்கலாம் என்று தோன்றும். அதுவும் யாக சாமான்களுடன் மலை ஏறி சென்று, நல்ல இடம் தேடி அமர்ந்து யாகத்தை நடத்தி, திரும்பி வந்து சேரும் முன் ஒரு வழியாகிவிடுவோம்.
மலை ஏறும் முன் தலைமை வகித்தவர் என்னை தொடர்புகொண்டு தாணிப்பாறை என்கிற இடத்திலிருந்து பேசினார்.
"ஒன்றும் கவலைப் படவேண்டாம். இது அகத்தியர் மேற்ப்பார்வையில் நடக்கிற யாகம். அவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார். எல்லாம் சரியாக நடக்கும். பயம் வேண்டாம். அவரை நம்பி, அடிவாரத்தில் பிரார்த்தனை செய்துவிட்டு உங்கள் பயணத்தை தொடங்குங்கள்" என்றேன் நான்.
அப்படி சொன்னேன் என்றாலும், எனக்குள்ளும், ஒரு சிறு கலக்கம். ஒரு போதும் இப்படி அமைந்ததில்லை. அதுதான் ஆச்சரியம்.
"சரி! எது நடந்தாலும், அகத்தியர் இருக்கிறார்.அவர் பார்த்துக் கொள்வார்" என்று சமாதானப் படுத்திக் கொண்டேன்.
சதுரகிரி போன்ற மலை இடங்களில், தொலை தொடர்பு என்பது அந்த காலத்தில் இல்லாமல் இருந்தது. ஆகவே, மேலே சென்ற ஒருவர், கீழே பூமிக்கு வந்து நம்மை தொடர்பு கொண்டால் தான் நமக்கு செய்தி. அல்லது அகத்தியரை நாடியில் பிடித்து "சொல்லுங்கள் குருநாதா! என்ன நடந்தது! எப்படி நடந்தது!" என்று கேட்கவேண்டும்.
எனக்கு நாடியில் கேட்க்க விருப்பம் இல்லை. ஏன் என்றால், அகத்தியரே அங்கு சென்று யாகத்தில் அமர்ந்திருப்பார். அந்த நேரம் பார்த்து நான் கேட்க்க, அவரும் கோபத்தால் திட்டிவிடுவார். அதனால், பொறுமையாக இருந்தேன்.
யாகத்துக்கு அடுத்தநாள், கீழே இறங்கிய ஒருவர் என்னை தொடர்பு கொண்டு யாகம் மிகச் சிறப்பாக நடந்தது என்றும், நாடியில் வந்து அகத்தியர் என்ன சொன்னார் என்றும் கேட்டார்.
நான் நாடியில் எதுவும் கேட்கவில்லை என்றும், நீங்கள் எல்லோரும் திரும்பி வந்து அமர்ந்திருக்கும் போது அகத்தியரிடம் முழுமையாக கேட்டுவிடலாம் என்று நினைத்துள்ளேன் என்று கூறினேன்.
சதுரகிரி மலை ஏறி யாகம் செய்து, இறங்கி வந்த களைப்பு விலகிய பின் ஐந்தாவது நாள் அனைவரும் வந்து அமர்ந்த பொழுது நாடியில் பிரார்த்தனையுடன் அகத்தியரை நாடினேன்.
முதலிலேயே ரகசியம் காக்க எனக் கூறி ஒரு சில விஷயங்களை கூறிய பின் சதுரகிரி யாகத்துக்கு வந்தார்.
"சதுரகிரி மலை சென்று ஆங்கோர் அகத்தியன் தவம் செய்த காட்ச்சிகளை காண்க, கண்டு உணர்க என்று சொன்னேன். அன்னவனும் தலை மேல் அப்பொறுப்பை ஏற்று, இஷ்டமித்திர நண்பர்களுடன் ஏகினான் மலைக்கு. அதுவரை எவ்வித தடங்கலும் இல்லாமல் இருப்பதற்கு, அகத்தியனே யாம் ஒரு சட்டை முனியையும் ஆங்கொரு ராமதேவனையும் சேர்த்து அனுப்பித்தோம். அவர்கள் இருவருமே, வரு விழியால் காத்திருப்பது போல,தாணிப்பாறை முதல் தவசிப்பாறை வரை வலம் வந்து, இன்னவர்களுடன் சேர்ந்து வந்த இரு பெண்மணிகள் உட்பட, அத்தனை பேரையும் பத்திரமாய் அழைத்து வந்து சேர்த்ததெல்லாம் அகத்தியன் செய்த ஏற்பாடுதான். அகத்தியன் செய்த ஏற்பாடு காரணமாகவே அத்தனை பேர்களும் தங்கு தடை இன்றி மேலே ஏறினாலும், ஒரு சிலருக்கு மூச்சு வாங்கியது உடலில் சிறு காயம் ஏற்பட்டதெல்லாம் உண்மை. ஈன்றெடுத்த மேஷத்திருமகன் மைந்தனுக்கும் ஆங்கொரு பாதத்தில் கொப்பளமாய் வெடித்தது உண்மை தானடா. பொல்லாத ஊசியது நெறிஞ்சிமுள். தெரிந்தோ, தெரியாமலோ காலிலே குத்தியதால், வந்த புண் தானடா. இருப்பினும், எத்தனையோ தவம் செய்த தன்மையும், சித்தத்தன்மை நோக்கி வருவதினாலும் அஷ்டமா சித்தியில், மோகன சித்தியை அன்றாடம் தப்பாமல் முறையாக செய்து வருவதாலும், அந்த காயம் ஒன்றும் இல்லாமல் போனாலும், சிறிதளவு உள்ளத்தில் பாதித்தது உண்மை தான். எதற்காகச் சொல்லுகிறேன் எனில் பாதை கரடு முரடாக இருந்தது மட்டுமல்ல, வாழ்க்கையில் பலவித இடையூறுகள் ஏற்படும் என்பதால், அதையும் சகித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே, அகத்தியன் செய்துவிட்ட நாடகமே என்றுணர்ந்து அமைதியாகுக. மற்றவர்களும், அனைவரும் பய பக்தியோடு, அங்கொரு மலை மீது தான் ஏறி குதித்து, மந்தி போல் ஏறி குதித்து மூச்சு வாங்கி, ஆசையோடு மேல் ஏறி அமர்ந்த கண் கொள்ளா காட்சி எல்லாம், அகத்தியன் மேலிருந்து ரசித்தேனடா.
அகத்தியன் ஆங்கொரு யாகம் செய்வதற்கு, ஓரிடத்தை தேர்ந்தெடுத்தோம், தவசிப் பாறைக்கு வடகிழக்கு நேர் கீழே. வடகிழக்கு திசைக்கு தெற்கே யாம் அமர்ந்தோம். ஆச்சரியம் என்னவெனில், பிரம்ம தேவன் தெய்வம் அங்கு வந்து அமர்ந்தானடா. அதுவே யாங்கள் செய்த பாக்கியமடா. பிரம்மதேவனே அங்கமர்ந்து "சுக்லாம் பரதரம்" என்று சொல்லிக் குட்டி ஆங்கொரு விநாயகர் ஹோமத்தை ஆரம்பித்து வைத்தான். இது நடந்ததொரு காலம் எல்லாம் காலையில் பிரம்ம முஹுர்த்தத்தில். ஆகவே, மூன்று மணிக்கு அங்கிருந்த நபர்களுக்கெல்லாம், அவர்கள் நாள் செய்யவே,யாகத்தின் வலிமையையும், சாம்பிராணி புகையையும், நெய்யது வாசனையையும் நுகர வைத்தோம். நெய்யது வாசனையை யார் யார் நுகர்ந்தார்களோ, அவர்களெல்லாம் பாக்கிய சாலிகள். ஏன் என்றால் ஐங்கரன் வேள்விதனை, அத்தனை சித்தர்களும், 18 சித்தர்கள் உட்பட, பக்குவமாய் செய்து கொண்டிருக்கிறோம். அந்த காட்ச்சிதான் கண் கொள்ளா காட்சி. ஆச்சரியம் என்னவெனில், ஐங்கரனே அங்கு வந்து அமர்ந்து ஆனந்தத்தால், எங்கள் தலையை தடவி, எங்களை ஆராதித்தான்.ஐங்கரனால் ஆசிர்வதிக்கப் பட்டபொழுது, சித்தர்கள் நாங்களே ஆச்சரியப் பட்டோம். நாங்கள் ஆசிர்வதிக்கப் பட்டதாக எண்ண வேண்டாம், அதை நாசியில் நுகர்ந்த அத்தனை பேருக்கும் அந்த பாக்கியம் கிட்டியதடா. ஆகவே, இந்த அனுபவம் யாருக்கும் கிடைக்காத ஒரு அனுபவம். சோம்பலாக அல்ல, நடந்து வந்த களைப்பால் தூங்கியவர்களுக்கெல்லாம் சில காட்ச்சியையும், முழித்துக் கொண்டே ஏங்கியவர்களுக்கு, சில சித்தர்கள் தரிசன காட்ச்சியையும், வேறு சில காட்ச்சிகளையும் ஏற்பாடு செய்துவிட்டேன். யாருக்கும் எக்குறையும் வரக் கூடாது என்பதுதான் அகத்தியன் எண்ணம். அதை நான் ஈடேற வைத்தது உண்மைதான். அகத்தியனோடு சேர்ந்து 17 சித்தர்கள், பிரம்மாவும்,விநாயகரும், ஆங்கொரு என்னப்பன் முருகனும் அத்தனை பேரும் ஒன்று சேர்ந்து இருந்து ஆங்கொரு யாகத்தில் இருந்ததெல்லாம் கண்கொள்ளா காட்சி எல்லாம் உண்மை.
விண்ணவர், விண்ணில் வாழும் தேவர்கள் பெரும்பாலும் அங்கு வந்து அமர்ந்து கொண்டு அந்த யாகத்தை கண்கொள்ளா காட்ச்சியாக கண்டார்களடா. அவர்களுக்கும் அந்த பாக்கியம் கிட்டியதடா. ஏன் என்றால் இந்த யாகம், ஏறத்தாழ 3247 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்து, அப்பொழுது காக புசுண்டர் தலைமையில் நடந்த யாகமடா!

மூதேவியை விரட்டி ஶ்ரீதேவியை வரவேற்போம்

சுமங்கலி பெண்கள் தலைவிரி கோளத்தில் இருக்க கூடாது, தலையை இரு கைகளாலும் சொரிதல் கூடாது.
*பெண்கள் பூசனைகாய் உடைத்தல் கூடாத
*அருகாகாலில் தும்புவது, அமர்வது, சாபிடுவது என கூடாது ,அம்மி,அடுப்பு, உரல் என உட்கார கூடாது.
* கிழிந்த உடைகள் உடுத்த கூடாது.
*அபசகுன வார்த்தைகள், சனியஏனெ எனவும் பேச கூடாது.
*மொரத்தை கவிழ்த்தும், படியை கவிழ்த்தும் வைக்க கூடாது.
*குளிக்கும் முன் தன்ணீரில் சிறிது கட்டி தயிர் போட்டு ஏழு நாட்கள் குளித்து வந்தால் தரித்திரம் நீங்கும்.
*குளித்த பின் நம்மிடம் முதலில் இடம் பிடிப்பது மூதேவியெ, பிறகுதான் ஶ்ரீதேவி வருவாள், அதனால் முதலில் முதுகினை துடைத்து பின்னரெ முகத்தை துடைக்கவும்.
*48 நாள் தொடர்ந்து வீட்டில் கோமியம் தெளித்துவர மூதேவி அகன்று ஶ்ரீதேவி வாசம் செய்வாள்.
*நம் உடலானது ரத்ததால் ஆனது மனித வாசனை ஶ்ரீதேவிக்கு ஏற்றதல்ல, ஏதெனும் பக்தி கமழும் வாசனை திரவம் பூசிக்கோள்வதால் ஶ்ரீதேவி நம்மிடம் உறைவாள்.

இன்பத்தின் இரகசியம்

1. நாணயமாக இருப்பவனிடம் எப்போதும் குழந்தைத்தனம் காணப்படும்.
2. உன் தகுதி பிறருக்குத் தெரியவேண்டுமானால் பிறர் தகுதியை நீ தெரிந்துகொள்.
3. திருட்டுப் பொருளை விலைக்கு வாங்குபவன் திருடனை விட மோசமானவன்.
4. தூக்கம் எப்போது குறைய ஆரம்பிக்கிறதோ அப்போதுதான் வாழ்க்கை ஆரம்பிக்கிறது.
5. அறிவுக்காக செய்யப்படும் முதலீடு எப்போதுமே கொழுத்த வட்டியையே தரும்.
6. நல்ல மனைவியை விட உயர்ந்த வரமும் இல்லை.
கெட்ட மனைவியை விட மோசமான சாபமும் இல்லை.
7. முதலில் மனிதன் மதுவைக் குடிக்கிறான். பின்பு மது மனிதனை குடிக்கிறது.
8. ஆயிரம் பேர் சேர்ந்து ஒரு தொழிற்சாலையைக் கட்டி விடலாம். ஒரு வீட்டைக் கட்ட ஒழுக்கமான ஒரு பெண் வேண்டும்.
9. இரண்டு கால் உள்ள எல்லோரும் நடந்து விடலாம். ஆனால் இரண்டு கை உள்ள எல்லோருமே எழுதிவிட முடியாது.
10. உழைப்பு உடலை வலிமையாக்கும். துன்பங்களே மனதை வலிமையாக்கும்.
11.ஒருவன் தான் செய்த தவறை ஒத்துக்கொள்ள வெட்கப்படக் கூடாது. ஒப்புக்கொள்வதன் பொருள் என்ன ? அவன் நேற்றைவிட இன்று அதிக
அறிவு பெற்று விட்டான் என்பதே.
12. வாழ்க்கை சுவையானது. உங்கள் அறியாமையினால் அதைக் கசப்பாக்கி விடாதீர்கள்.
13. பிறரைப் பாராட்டுங்கள். பாராட்டு கிடைக்கும். பிறரை மதியுங்கள். மதிப்புக் கிடைக்கும். அன்பு செலுத்துங்கள். அன்பு தேடி வரும். இவை ஒற்றைவழிப் பாதைகள் அல்ல. இரட்டை வழிப் பாதைகள். அன்பில் வணிகத்திற்கு இடமில்லை. வணிகத்தில் அன்புக்கு இடமில்லை.
14. தனக்கென வாழ்ந்தவன் தாழ்ந்தவன் ஆகிறான். பிறருக்கென வாழ்பவன் பெருவாழ்வு வாழ்கிறான். அடக்கம் அணிகலன் மட்டுமல்ல. அறத்தின் காவலன்.
15. சொற்கள் நம் சிந்தனையின் ஆடைகள். அவற்றைக் கந்தல்களாகவும், கிழிசல்களாகவும், அழுக்காகவும் உடுத்தக் கூடாது.
16. சோம்பேறிக்கு எல்லாமே கடினமாகத் தோன்றும். ஊக்கமுள்ளவனுக்கு எல்லாமே எளிதாகத் தோன்றும்.
17. எந்தவிதக் கொள்கையும், நோக்கமும் இல்லாத வாழ்க்கை திசைகாட்டும் கருவி இல்லாத கப்பல் நடுக்கடலில் நிற்பதற்கு ஒப்பாகும்.
18.எந்த மனிதன் தீவிரமாகவும், திடமாகவும், சிந்திக்கிறானோ அந்த சிந்தனைகளின் வளர்ச்சி கலையாகும். அவ்வாறு சிந்திக்கிறவனே கலைஞன் ஆவான்.
19. பல அறிஞர்களுடன் பழகினால் நீ அறிவாளி ஆவாய். ஆனால் பல பணக்காரர்களுடன் பழகினாலும் பணக்காரன் ஆக மாட்டாய்.
20. இன்பத்தின் இரகசியம் எதில் அடங்கியிருக்கிறது தெரியுமா ? நீ விரும்பியதைச் செய்வதில் அல்ல. நீ செய்வதை விரும்புவதில்தான்.

கோடீஸ்வரனாக்கும் குபேர இரகசியங்கள் !!!

வந்த செல்வத்தை மதித்துப் போற்றுங்கள். வராத வருமானத்தை எண்ணி ஏங்காதீர்கள். அவற்றின்மீது ஆசை வைக்காதீர்கள். பணம் வந்தால் வாய்பிழந்த ஏழைகளுக்கு வாரி வழங்கி வள்ளலாவேன்! என்று இறைவனிடம் திரும்பத் திரும்பக் கூறுங்கள். குபேர வாசலைத் திறந்து விடுவார். வரவு-செலவுக் கணக்கை, முறையாய் வைத்திருப்போர்க்குக் கணக்கின்றி செல்வம் வழங்க வேண்டும்! என்பது தெய்வச் சட்டம். கணக்கு வைத்து வாழுங்கள். கணக்கின்றிச் செல்வம் குவியும்.
* பணத்தைப் பிறரிடம் வழங்கும்போது தலைப் பகுதியியை நம் பக்கம் வைத்தபடி வழங்கிப் பிரியா விடைதரவும்.
*வாடகை..... பலசரக்கு.... பால்பாக்கி... எனப் பணத்தைப் பிறருக்கு வழங்கும்போதெல்லாம், சீக்கிரம் வேறு வழியில் என்னிடம் வந்து சேர்! எனப் பிரியா விடை கொடுத்து அனுப்புங்கள்.
* ஈரம், ஈரத்தை ஈர்ப்பதுபோல் ஏற்கனவே இருக்கும் பணம்தான் புதிய பணத்தை ஈர்த்து வரும். எனவே பர்சில்... வங்கியில்.... பீரோவில் வறட்சி கூடாது. இருப்புத் தொகை அதாவது குறிப்பிட்ட தொகை இருக்கும்போதே செலவை நிறுத்தி விட வேண்டும். நாள்தோறும் கண்கள் பணத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கும் வகையில் பசுமையைப் பராமரிக்கவும்.
*தூய்மையற்ற இடத்திற்குள் திருமகள் நுழைய மாட்டாள். வீடு.... அலுவலகம்.........கல்லாப்பெட்டி.....பணப்பை.... எனச் செல்வம் புழங்கவேண்டிய இடங்களை எப்போதும் தூய்மையாக வைத்துப் பராமரிக்கவும்.
*வணிகத்தை... தொழிலை.... அலுவலகப் பணியை மனமலர்ச்சியுடன் விளையாட்டகச் செய்யுங்கள். சிரிப்பவர்களைப் பார்த்தே செல்வ லட்சுமி வருகிறாள். சிடுமூஞ்சிகளையும் அழுமூஞ்சிகளையும் பார்த்து மூதேவிதான் விரும்பி வருகிறாள். சிரித்து வாழுங்கள். சிரிப்பவர்களுடன் சேர்ந்து வாழுங்கள்.
*குபேர லிங்கம் படத்தைப் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள். பண வருமானம் குறையாது.
* கீழே குறிப்பிட்டுள்ள குபேர மந்திரத்தை நாள்தோறும் குறைந்தது 7 முறை உச்சரித்துக் குபேர தேவனை வேண்டுங்கள் குபேர உறவு வாய்க்கும். வெள்ளிக்கிழமைகளில் பூவும் காசும் சமர்ப்பித்து 108 குபேரன் போற்றி சொல்லிக் குடும்பத்துடன் வணங்கி வந்தால் வருமானம் பெருகும்.
ஓம் ........ஹ்ரீம்.......க்ளீம்சௌம்........ஸ்ரீம்......கும் குபேராய........... நரவாகனாயயக்ஷ ராஜாய...... தன தான்யாதிபதியே............ லக்ஷ்மி புத்ராய......ஸ்ரீம்........ ஓம்....... குபேராய நமஹ.........!
உன்னதமான வாழ்வுக்கும் உயர்வான சிந்தனை உள்ள வாழ்வுக்கும் வாழ்கைக்கும் நூறு சதவீதம் உத்திரவாதம் தரும் ஒரே ஜோதிட நிலையம்
ஸ்ரீ கால பைரவி ஜோதிட நிலையம்
விஞ்ஞான மருத்துவ ஜோதிடம் மற்றும் வானியல் மருத்துவம்
அரசு மருத்துவமனை எதிரில்
ஆத்தூர்
சேலம் (மாவட்டம்)
M.கிருஷ்ண மோகன் 8526223399
மனம் தரும் பணம்! போன்ற பொன்மொழிகளை உணர்ந்து முதலில் மனத்தைப் பணக்கார மனமாக மாற்றுங்கள். வெகுசீக்கிரம் வெளியில் பணக்காரன் ஆகிவிடுவீர்கள்.
ஈசனின் அருளால் மற்றவர்களுக்கு நன்னெறிகளை கற்பிப்பதும், நல்லனவற்றை சிந்திப்பதும், பேசுவதும், எழுதுவதும் சேவை செய்வதும், பூஜை செய்வதுமே ஆகும். இறைவன் நமக்கு கொடுத்த சக்தியினை, புத்தியினை நாம் வீணாக பயன்படுத்துவதை அவர் ஒருபோதும் விரும்ப மாட்டார், இதை முதலில் கவனத்தில் கொள்ளுங்கள்.

துளசியின் அனுபவ வைத்திய ரகசியம்'

நமது தேசத்தில் இருபத்திரண்டு துளசி வகை உள்ளன.அவற்றில் நாம் பொதுவாக காண்பது நல்துளசி ராமதுளசி கருந்துளசி கிருஷ்ணதுளசி நாய் துளசி கஞ்சாங்கோரை மற்றும் எலுமிச்சம் துளசி,கற்பூரத் துளசி,செந்துளசி,நிலத்துளசி,நீர்த்துளசி,கல்துளசி,முள்துளசி முதலியன.
"ஐயம் வயிறுளைச்ச லஸ்தி சுரந்தாகமும் போம்
பைய சுர மாந்தம் பறக்குங்காண் - மெய்யாக
வாயின ரோசனம் போம் வன்காரஞ்சூடுள்ள
தூய துளசி தனைச்சொல்"
கார்ப்பும்.வெப்பமும் உள்ள துளசியினால் கபதோஷம்,வயிறுளைத்தல்,அஸ்தி , தாகம் மாந்த சுரம், அருசி இவைபோம்
வைணவ கோயில்களில் துளசியினால் மூலவருக்கு அர்ச்சனை செய்வதோடின்றி. இதை தண்ணீர் விட்டு தீர்த்தம் என்று நமக்கு ஒரு உச்சிக்கரண்டி கொடுக்கிறார்கள்.இதனால் என்ன பயன் என்று நாம் சிந்திப்பதில்லை. சுவாமி பிரசாதமென்று பயபக்தியுடன் சாப்பிடுகிறோம். இது என்றோ ஒருநாள்நடப்பது.
ஹிந்துக்கள் வீடுகளில் பொதுவாக பூஜை அறை என்று ஒரு சிறு அறையிருக்கும். இதில் பெருமாள், அம்பாள், முருகர், சிவன், விநாயகர் என பல படங்கள் இருக்கும்.தினம் இங்கு பூஜை செய்த பின்பே மற்றகாரியம் பார்ப்பார்.சைவர்கள் வில்வத்தை கொண்டு அர்ச்சித்தும், வைணவர்கள் துளசி தீர்த்தம் சாப்பிட்ட பிறகே உணவு உன்ன செல்லுவர்.
துளசியின் மருத்துவ குணங்களை ஆராய்ந்தோமானால் நம் முன்னோர்கள் எத்தனை அறிஞர்கள் என்பதை அறியலாம்.
துளசி தீர்த்தத்தை பிரதி தினமும் எப்பொழுதும் தொடர்ந்து சாப்பிடுவர்களுக்கு புற்றுநோய் அணுகாது.
புற்றுநோய் எந்த உறுப்பிலிருப்பினும் துளசி இலை இருபத்தொன்று, மிளகு ஆறு சேர்த்து பசுமோர் விட்டு அரைத்து, காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட குணம் காணலாம்.
குழந்தைகளுக்கு இது ஓர் சஞ்சீவி. குழந்தைகளுக்கு அவ்வப்பொழுது சளி,இருமல்,சுரம் வந்தால் டாக்டர்கள் அந்நோய்க்கு பிரைமரி காம்பளக்ஸ் என்று பெயரிட்டு ஸ்ரெப்டோமைசின் என்ற ஊசிகள் கணக்கின்றி ஏற்றுவர்.
இம்மருந்து உடலில் உள்ள உயிரணுக்களைக் கொன்று இயற்கையில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து விடுகிறது.இச்சிகிச்சை முடிந்த பின்பு டாக்டர்கள் X-Ray படம் எடுத்து பார்த்துவிட்டு நோய் நீங்கியது என்பர்.ஆனாலும் அக்குழந்தைக்கு சளி,இருமல் தொல்லை இருந்த வண்ணம் இருக்கும்.அது மட்டுமின்றி நாளுக்கு நாள் மெலிந்து விடும்.சில குழந்தைகளுக்கு காத்து கூட கேட்பதில் மந்தமாகும்.
குழந்தைகளுக்கு சளி,கபம் அடிக்கடி பிடிக்கும்.இதில் தப்பில்லை. அதற்காக துளசி இலை இருக்கையில் ஊசிகள் ஏன்.
இரவில் ஒரு கோப்பையில் காய்ச்சி ஆறிய தண்ணீர் விட்டு அதில் ஏழு துளசி இலைகளைப் போட்டு மூடி மறுநாள் காலை வெறும் வயிற்றில் வயதுக்கு தக்கவாறு ஒரு பாலாடை முதலி அரை கோப்பை வரையில் கொடுத்துவர அடிக்கடி வரும் ஈளை, இருமல்,சுரம் முதலிய நோய்கள் குணமாவது தவிர அது நோய் தடுப்பு மருந்தாகவும் பயன்படுத்தும்.
துளசி இலைகளை புட்டவியலாக வேக வைத்து சார் பிழிந்து ஒரு தேக்கரண்டியளவு எடுத்து கொஞ்சம் தேன் கூட்டி சுரம்,சளி முதலிய நோய்களுக்கு கொடுக்க இரண்டு வேலைகளிலேயே குணமாகும்.
பிணத்தின் கீழ் மேல் துளசியிலைகளை பரப்பி மூடிவைத்தால் அப்பிணம் இரண்டு மூன்று நாட்டகள் வரை அழுகாது காக்கும் தன்மை பெற்றது.
பிணத்தையே அழுகாது காக்கும் மூலிகை உயிருடன் வாழும் நம்மை காப்பதில் ஐயமுண்டா.
இந்துக்களின் வீடுகளில் துளசி செடியை தொட்டியில் வைத்து பிரதி தினமும் வணங்குவர்.இதை "துளசி மாடம்" என்பர்.நம் மூதாதையர் காலத்திலிருந்து வரும் இப்பழக்கத்தினால் அவர்தம் மருத்துவ ஞானத்தை என்னென்று சொல்லுவது.
ஆங்கில ஆடம்பர மருத்துவம் இந்நாட்டில் முந்நூறு வருடங்களுக்கு முன் நுழைந்தது.அதற்கு முன் நம் முன்னோர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக ஊசியை நம்பித்தான் ஆரோக்கியமாகவும்,அமைதியாகவும் வாழ்ந்தார்களா? சிந்தனைக்குரியது.
நாகரீகம் என்ற பெயரால் அநாகரீகமான பல பழக்கவழக்கங்களை நாம் மேற்கொண்டு பல நோய்களை வருவித்துக் கொள்ளுகிறோம்.நம் மூதாதையர்களை விஞ்ஞானம் தெரிய அஞ்ஞானிகள் என சிலர் எண்ணுகின்றனர்.மக்கள் நல்வாழ்வு வாழ வேண்டுமென்று சிந்திக்கும் வைத்தியம், ஞானம், யோகம் முதலியவைகளை இரவு பகலாக ஓலை ஏடுகளில் நம் மூதாதையர்கள் எழுதி வைத்துள்ளனர்
.
ஆகவே அவர்கள் காட்டிய துளசியை வணங்குங்கள், உபயோகியுங்கள், நீடூழியாய் ஆரோக்கியத்துடன் வாழுங்கள்.
நன்றி.
வர்மக்கலை ஆசான்.எஸ்.கோபாலகிருஷ்ணன்
+919894285755

#‎ஐஸ்வர்யம்_பெருக_வழிமுறைகள்‬....

1. காலையில் எழுந்தவுடன் உள்ளங்கைகளை பார்க்கவும்.
2. குளித்தபின்பு முதுகை முதலில் துடைக்கவும். பின்பு, முகத்தை துடைக்கவும். குளித்தவுடன் துவட்டும்போது முதலில் மூதேவி தான் உடலில் இடம் பிடிப்பாள். பின்தான் லட்சுமி வருவாள்.
3. பூஜைகளில் அல்லது கடவுளை வணங்கும் சமயத்தில் கைலிகள் என அழைக்கபடும் லுங்கிகள் அணியக்கூடாது.
4. சாப்பிடும்போது இடதுகை எப்போதும் வட்டிலைத் தொட்டு கொண்டு தான் இருக்கவேண்டும். வட்டிலை தட்டு என்று சொல்லகூடாது. அது தட்டுபாட்டுக்கு உரிய சொல்.
5. இரவில் தயிர் சேர்த்துக் கொள்ளக் கூடாது.
6. பூஜை அறையில் பழனியாண்டவர் படம் வைப்பதாக இருந்தால், ஆண்டியின் கோலமான கையேந்தும் வடிவம் இருப்பின் அதை எடுத்து விட்டு ராஜா கை வைத்து இருப்பது போல் வைக்கவும்.
7. வீட்டின் வாசலை பார்த்தவாறு ஏழுமலையான் (பெருமாள்) படம் வைக்கவும்.
8. மகா சொர்ணாகர்ஷணபைரவர் படத்தையும், ஐஸ்வரேஸ்வரர் படத்தையும் கட்டாயம் வைக்க வேண்டும்.
9. படத்திற்கும், கல்லாபெட்டிக்கும் அல்லது பீரோவிற்கும் மல்லிகை பூ கட்டாயம் வைக்கவேண்டும். மல்லிகை லட்சுமிக்கு விருப்பமான பூ.
10. பணத்தை ஒருவரிடம் கொடுக்கும்போது தலை பகுதி நம்மிடம் இருக்குமாறு கொடுக்கவேண்டும்.
11. லட்சுமி ,குபேரர் மந்திரங்களை நாள்தோறும் கூற வேண்டும், அல்லது மகான் திருமூலர் கூறியதுபோல “ஓம் ஐஸ்வரேஸ்வராய நம “என்றாவது கூறவேண்டும். இதை மல்லிகை பூ போடும் போது கட்டாயம் கூறவேண்டும்.
12. வீட்டின் முன்பு கண்திருஷ்டி படம் என்று கூறும் பூதம் படத்தை எடுத்துவிட்டு விநாயகர், முருகர் படங்களை மாட்டவும்.அப்போது தான் தெய்வாம்சம் காணப்படும். அதை விடுத்து அரக்கர் படமோ. விநாயகர் கோபமாக உள்ள கண்திருஷ்டி படமோவெல்லாம் மாட்டக் கூடாது.
13. ஒரு நாளைக்கு ஓரு முறையாவது மகான் அரங்க மகாதேசிகர் அருளிய சித்தர் மந்திரம் கூறவும். அப்போதுதான் அருள்செல்வம் முதலில் வரும். அதன்பின் பொருள்செல்வம் தானே வரும்.
ஓம் அகத்தீசாய நம!
ஓம் கரூவூர்தேவாய நம!
ஓம் போகதேவாய நம!
ஓம் கோரக்கதேவாய நம!

தலைச்சுற்றலுக்கு கறிவேப்பிலை தைலம்

தலைவலியை உணராதவர்களே இருக்க முடியாது.. அதோடு தலைச்சுற்று வந்தால் சொல்லவே வேணாம்.. இதிலிருந்து விடுதலை பெற இயற்கையின் வரப்பிரசாதமான கறிவேப்பிலை நமக்கு பெரிதும் உதவுகிறது. தலைச்சுற்றை அடியோடு விரட்டும் கறிவேப்பிலை தைலம் இதோ:
கறிவேப்பிலை - 200 கிராம்
பச்சை கொத்தமல்லி - 50 கிராம்
சீரகம் - 50 கிராம்
நல்லெண்ணை - 600 கிராம்
பசுவின் பால் - 200 மில்லி
கறிவேப்பிலையை காம்புகள் நீக்கி நன்றாக அரைத்துக் கொள்ளவும். பச்சைக் கொத்துமல்லியையும் மையாக அரைத்துக் கொள்ளவும்.
சீரகத்தை சுத்தம் செய்து மண் சட்டியில் போட்டு 200 மி.லி. பாலை ஊற்றி ஆறு மணி நேரம் மூடி வைத்திருந்து சீரகத்தை எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு மண்பானையில் நல்லெண்ணையை ஊற்றி அடுப்பில் வைத்து சிறிது சூடேறியதும் அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலையை போடவும். ஐந்து நிமிடங்கள் மேலும் சூடேறியப் பிறகு பச்சை கொத்துமல்லியைப் போடவும். அதன் பின் ஐந்து நிமிடங்கள் கழித்து சீரகத்தையும் போட்டு, தைலப்பதம் வந்ததும் இறக்கி ஆறவிடவும். ஆறியதும் மெல்லிய துணியில் வடிகட்டிக் கொள்ளவும்.
நான்கு நாட்களுக்கு ஒரு முறை நல்லெண்ணைக்கு பதிலாக கறிவேப்பிலைத் தைலத்தை தேய்த்து குளிக்கலாம். தைலத்தை தேய்த்து குளிக்கும் அன்று குளிர்ந்த உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.

அற்புதங்கள் நிறைந்த அத்ரிமலை

மேற்குத்தொடர்ச்சி மலைகளின் அற்புத அதிசயங்களை, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எண்ணற்ற மலைகளில் காணலாம். அகத்திய மாமுனிவர், கோரக்கநாதர், தேரையார் போன்ற சித்தர்கள் வாசம் செய்த புண்ணிய ஸ்தலமாக திருநெல்வேலி விளங்குகிறது. இதில், ஒன்று 'அத்ரிமலை' எனும் மூலிகை மலை. இதைத்தான், 'பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்' என பாடினர். 'இம்மூலிகை தென்றல் உடலில் பட்டாலே போதும் நோய்கள் விலகியோடும்,' என்பது நம்பிக்கை.
இம்மலையில் அத்ரிமகரிஷி வாசம் செய்தார். சீடர்கள் தியானம் செய்த இடம், மூலிகை மருந்து தயாரித்த இடம் போன்றவை காலத்தால் அழியாத காவியம் போல் இன்றளவும் பசுமையாக காட்சியளிக்கிறது. இயற்கை அன்னையையும் காக்கும் 'சித்து விளையாட்டு' சித்தர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும் ரகசியம்,

இம்மலைக்கு செல்வதே ஒரு வித்தியாசமான அனுபவம் தான்.
கடனா அணை, முண்டந்துறை வன காப்பகம் என எண்ணற்ற ஸ்தலங்களை உள்ளடக்கியது. பசுமை போர்த்திய மூலிகை மலைகள், வானத்தையும், வனத்தையும் இணைக்கும் மேகக்கூட்டங்களை காண கண்கோடி வேண்டும். அத்ரிமலை அடிவாரத்தில் கடனா அணை, ஜில்லென வீசும் பொதிகை மலைத்தென்றல், நாசி துவாரங்களை துளையிட்டு செல்லும் மூலிகை மனம்... என நற்குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள கடனா அணையை (85 அடி உயரம்) அடைய வேண்டும்
அங்கிருந்து அணை வழியாக 7 கி.மீ., துாரம் அடர்ந்த வனப்பகுதிக்குள் நடை பயணம் மேற்கொள்ள வேண்டும். இடையே அத்ரி கங்கா நதியை கடக்க வேண்டும். வனத்தில் செல்லும்போது சித்தர்கள் வாழ்ந்த
அடிச்சுவடுகளை காணலாம். இப்படி... ஒவ்வொரு பகுதியாக கடந்து சென்ற பின் 'அனுசுயா தேவி, அத்ரி மகரிஷி ஆசிரமம்'அமைந்துள்ளது
கோரக்க சித்தருக்காக... அத்ரிமகரிஷி தோற்றுவித்த 'கங்கா நதி ஊற்று' இன்றளவும் தெளிந்த நீரோடையாக வற்றாத சுனை ஊற்றாக உள்ளது. இங்கு, அகத்தியர் கோரக்கர் இணைந்த கோயில் உள்ளது. இங்கு, 'சித்தர்கள் தியானம் செய்த இடத்தில் அமர்ந்து சிறிது நேரம் கண்களை மூடி தியானம் செய்யும்போது மன அமைதி, உள்ளத்தில் சாந்தி பிறக்கிறது' என்பது நிதர்சனம்.
பொதுவாகவே வேறு எங்கும் பஞ்சம் ஏற்படலாம்; ஆனால், அத்ரிமலையில் மட்டும் ஏற்படாது என்று சொல்வார்கள். அதற்குக் காரணம், இந்த இடம் ஒரு தபோவனமாக இருப்பதுதான். அத்ரி மகரிஷி, தன் பிரதான சீடர்களோடு இங்கே யாகம் புரிய வந்தார். அந்த சீடர்களில் கோரக்கர் குறிப்பிடத்தக்கவர். தன் குரு அத்ரி முனிவருக்கு அவர் வேண்டிய உதவிகளைச் செய்து வந்தார். அந்தச் சமயத்தில் தென்பாண்டிச் சீமையில் பல நல்ல நிகழ்வுகளும் கோரக்கரால் நிகழ்ந்தேறின. ஒரு காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் பெரும் பஞ்சம் தலைவிரித்தாடியது. இந்தப் பஞ்சம் தாமிரபரணிக் கரையிலுள்ள நெல்லையப்பர் ஆட்சி செய்யும் திருநெல்வேலி சீமை வரை நீடித்தது. நெல்லுக்கு வேலியிட்டவர் நெல்லையப்பர்; இவர் ஆட்சி புரியும் பகுதியிலேயே பஞ்சமா! அனைவரும் அதிர்ந்தனர்.
இதன் காரணத்தினை தெரிந்து கொள்ள இப்பகுதி மக்கள் அத்ரி மலையிலிருந்த கோரக்கரை நாடினர். மக்களின் குறைகளை கோரக்க முனிவர் கேட்டார். பின்னர், தன்னுடைய ஞானதிருஷ்டியின் மூலமாக அதற்கான காரணத்தினையும் அறிந்து கொண்டார். தட்சனின் யாகத்தில் கலந்து கொண்ட அக்னி தேவனும், அவரது வாகனமாகிய ஆடும், சிவ பெருமானின் சாபத்திற்கு உள்ளானார்கள். தன்னை மதிக்காமல் தட்சன் நடத்திய யாகத்தினை கண்டு வெகுண்டு எழுந்தார் சிவபெருமான். அவர் தட்சனை அழித்து உக்ர வடிவில் காட்சி தந்தார். அக்னி ரூபத்தில் அவர் காட்சி தந்த காரணத்தினால் இப்பகுதி பஞ்சத்தால் வாடத் தொடங்கின. நெற்பயிர்களெல்லாம் கருகின. ஆகவே, இந்த இடம் கருங்காடு, கரிக்காதோப்பு என்றழைக்கப்பட்டது.
இதைத் தெரிந்து கொண்ட கோரக்கர், ஒரு யோசனை கூறினார். “தாமிரபரணிக் கரையில் கிழக்கு நோக்கி லிங்கம் அமைத்து யாகங்களும் பூஜைகளும் செய்தால் ஈசனின் கோபம் குறையும். அழிந்து வரும் இப்பகுதியும் மீண்டும் புத்துயிர் பெறும்; நாட்டில் நிலவும் பஞ்சமும் நீங்கும்’’ என்று கூறினார். உடனே, அவரும் மக்களின் பிரச்னையை தீர்க்க தாமிரபரணியின் மேற்குக் கரைக்கு வந்தார். அங்கு ஒரு சிவலிங்கத்தினை பிரதிஷ்டை செய்தார். பௌர்ணமி தினத்தன்று யாகங்களை நடத்தத் து வங்கினார். இதனால் மகிழ்ச்சியடைந்த சிவ பெருமான் அக்னி சொரூபத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார்; தண்ணருளைப் பொழிந்தார். இந்த இடத்தில் அழியாபதி ஈஸ்வரர் என்கிற திருப்பெயரில் காட்சி தந்தார். அதன் பின்னர் நாடு முழுவதும் பஞ்சம் நீங்கியது. தாமிரபரணிக் கரையின் கீழ்ப்பகுதியில் அக்னீஸ்வரரையும் மேல் பகுதியில் கோரக்கர் அமைத்த அழியாபதீஸ் வரரையும் தற்போதும் காணலாம். இத்தலமும் நெல்லை நகரத்திலுள்ள குறுக்குத்துறைக்கு அருகிலுள்ளது.
சிவலிங்க வழி பாட்டின் பெருமைகளை அளவிட முடியாது. வழிபாடு, ஸ்தோத்திரம், பாராயணம், தரிசனம், அபிஷேகம் இப்படி பல விதங்களிலும் மனதையும் உடலையும் சிவனுக்கு அர்ப்பணித்து பக்தியில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல் மற்றோரையும் அதில் மூழ்கச் செய்பவர்களே சித்தர்கள். இவ்வாறு சித்தர்கள் அமைத்து வழிபட்ட லிங்கத்தை ‘ஆர்ஷ லிங்கம்’ என்பார்கள். இந்த வகையில் கோரக்கர் முனிவர் அமைத்து வழிபட்ட ஆர்ஷ லிங்கம் இதுவே. கோரக்கர் உருவாக்கிய இந்த லிங்கம் குறித்து தாமிரபரணி மகாத்மியம் பெருமைபட பேசுகிறது. சப்த ரிஷிகள் சாதாரணமானவர்கள் அல்ல. அவர்கள் அண்டம், அகிலங்களையெல்லாம் தோற்றுவிக்கும் சக்தி படைத்தவர்கள். சப்த ரிஷிகள்தான் நட்சத்திர மண்டலங்களாக வானில் ஜொலிப்பதாக வடமொழி வானசாஸ்திர நூல்கள் கூறுகின்றன.
சித்திர சிகண்டிகள் எனப் பெயர் பெற்ற ஏழு ரிஷிகளில் ஒருவராக திகழ்கிறார் அத்ரி. வேத மந்திரங்களை உலகுக்கு வழங்கிய ரிஷிகளில் இவருக்கு முக்கியப் பங்குண்டு. ரிக் வேதத்தின் பல காண்டங்களை அத்ரி மகரிஷிதான் தம்முடைய தபோ வலிமையால் ஈர்த்துக் கொடுத்தார். அத்ரி மகரிஷி ஆயுர்வேதம், ஜோதிடம் போன்றவற்றிலும் சிறந்த நூல்களை இயற்றியுள்ளார். மானுட சரீர ரகசியங்கள், யோகம் போன்றவற்றை பதஞ்சலி ரிஷிக்கு குருவாய் இருந்து கற்றுக் கொடுத்துள்ளார். பிரபஞ்சப் படைப்பை விஸ்தரிப்பதற்காக ஆழ்ந்த பெருங்கடலின் அடியில் கடும் தவம் செய்து கொண்டிருந்தார் அத்ரி மகரிஷி. அதே வேளையில் அவருக்கு மனதில் வேறு ஒரு எண்ணம் தோன்றியது. உலகிற்கு ஒரே ஒளியாக சூரியன் திகழ்கிறது. இந்த சூரியன் பகலில் மட்டும் வெளிச்சம் தருகிறது. ஆனால், இரவில் வெளிச்சம் இல்லாமல் ஜீவராசிகள் துன்பப்படுகின்றன. எனவே, இன்னொரு ஒளியும் உலகிற்கு வேண்டுமென்று நினைத்தார்.அதற்காக ஒரு அற்புதத்தை செய்தார்.
அத்ரிமலை யாத்திரை சுமார் 7 கி.மீ. நடை பயணம்தானே என்று அலட்சியமாக இருக்கக் கூடாது. விரதமிருந்து அத்ரியை மனதில் நினைத்து நடைபயணத்திற்கு ஆயத்தமாக வேண்டும். நிச்சயம் தனியாக செல்லக்கூடாது, நாலைந்து பேர் சேர்ந்துதான் போக வேண்டும். போகும் வழியில் கூச்சல் போடாமல் செல்ல வேண்டும். கூச்சலைக் கேட்கும் மிருகங்கள் கீழேயிறங்கி வந்து விடக் கூடும். மேலும், அடர்ந்த காட்டுக்குள் செல்லும்போது கவனமாகச் செல்ல வேண்டும். கவனம் தப்பினால் பாதை மாறிவிடும். காலை உணவை கையில் வைத்துக் கொண்டு, காலை 7 மணிக்கு பயணம் துவங்கினால் ஆற்றை கடக்கும் போது உணவை உண்டுவிட்டு பின்னர் பயணத்தைத் தொடர்ந்தால் மதியத்துக்குள் அத்ரிதபோவனத்துக்கு சென்று விடலாம். அங்கேயே மதிய சாப்பாட்டை சமைத்துக் கொள்ளலாம். பௌர்ணமி, அமாவாசை, கடைசி ஞாயிற்றுக்கிழமை போன்ற தினங்களில் மேலே அன்னதானம் நடைபெறும். முக்கியமாக, பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதை முற்றிலுமாகத் தவிர்க்கப் பாருங்கள்; ரொம்பவும் அவசியமென்றால் அந்த பிளாஸ்டிக் குப்பைகளை அத்ரி மலையில் எங்கும் போட்டுவிடாமல், யாத்திரை முடிவில் கீழே இறங்கியபின் உரிய குப்பை போடும் பகுதியில் சேர்த்துவிடுங்கள்.
இயற்கை அன்னையின் அரவணைப்பில் பிறந்த அத்ரிமலையின் , ஒருமுறையேனும் சென்று பாருங்களேன்!
(இந்து அறநிலைய ஆட்சித்துறைக்கு சொந்தமானது) .
தொடர்புக்கு, 'அவசியம்' ராமுஜி, 98421 89158.(மினி பஸ் வசதி உள்ளது).

#‎லாட்டரி‬...(திடீர் பண வரவு) , ‪#‎ரேஷ்‬-‪#‎சூதாட்டம்‬, ‪#‎போட்டி‬ பந்தயங்களில் வெற்றி -வாய்ப்புகள்...!

#‎ஐந்தாம்‬ இடத்தில், இருக்கும், கிரகங்களை பொறுத்து தான் அமையும்.
‪#‎சூரியன்‬ 5ல் இருந்தால், வெற்றி குறைவு,
‪#‎சந்திரன்‬ 5ல் இருந்தால், வெற்றி அதிகம்,
‪#‎செவ்வாய்‬ 5ல் இருந்தால், பணம் விரையம்,
‪#‎புதன்‬ 5ல் இருந்தால், மேலே சொன்னவைகளில் ஈடுபாடு குறைவாகும், அதனால் தோல்விதான்,
‪#‎குரு‬ 5ல் இருந்தால், மேலே சொன்னவைகளில் வெற்றி உண்டு,
‪#‎சுக்ரன்‬ 5ல் இருந்தால், ஈடுபாடு குறைவு, அதனால் தோல்வி,
‪#‎சனி‬ 5ல் இருந்தால், தோல்வி,
‪#‎ராகு‬ அல்லது கேது இருந்தால், ராகுவிற்கு சனியின் பலனையும், கேதுவிற்கு செவ்வாயின் பலனையும் எடுத்து கொள்ள வேண்டும்,
‪#‎மேலும்‬
2, 5, 11 ஆம் அதிபதிகளின் நிலையும் கவனிக்க வேண்டும்...!!!

சில ஹோமங்களும் அதன் பயன்களும்

1. கணபதி ஹோமம் : தடைகள் விலகும், எடுத்த காரியங்கள் வெற்றி அடையும்.
2. சண்டி ஹோமம் : பயம் போக்கும், வாழ்வில் தொடர்ந்து வரும் தரித்திரம் நீக்கும்.
3. நவகிரஹ ஹோமம் : கிரக தோஷங்கள் போக்கி மகிழ்ச்சியும், வளமும் உண்டாகும்.
4. சுதர்ஸன ஹோமம் : ஏவல் பில்லி சூனியங்கள் நீங்கும், சகல காரியங்களிலும் வெற்றி தரும்.
5. ருத்ர ஹோமம் : ஆயுள் விருத்தி உண்டாகும்.
6. மிருத்யுஞ்ச ஹோமம் : மந்தி தோஷம் போக்கும், பிரேத சாபம் நீக்கும்.
7. புத்திர கமோஷ்டி ஹோமம் : புத்திர பாக்கியத்தை உண்டாக்கும்.
8. சுயம்வர கலா பார்வதி ஹோமம் : பெண்களுக்கு திருமண தடை நீக்கி விரைவில் நடைபெறும்.
9. ஸ்ரீ காந்தர்வ ராஜ ஹோமம் : ஆண்களுக்கு திருமண தடை நீக்கி விரைவில் நடைபெறும்.
10. லக்ஷ்மி குபேர ஹோமம் : செல்வ வளம் தரும், பொருளாதார பெருக்கம் ஏற்படும்.
11. தில ஹோமம் : சனி தோஷம் போக்கும், இறந்தவர்களின் சாபங்களை நீக்கும்.
12. ஸ்ரீ ப்ரத்யங்கிரா ஹோமம் : நோய்கள் நீங்கும், எதிரிகளின் தொல்லைகள் நீங்கும்.
13. ஸ்ரீ பிரம்மஹத்தி ஹோமம் : எதிரிகளின் சூழ்ச்சிகள் தொல்லைகள் நீங்கி, வெற்றி மேல் வெற்றி உண்டாகும்.
14. கண்திருஷ்டி ஹோமம் : திருஷ்டி தோஷங்கள் விலகும், காரிய தடைகள் நீக்கும்.
15. கால சர்ப்ப ஹோமம் : திருமண தடை உத்தியோக தடை நீங்கும், வாழ்வில் சோதனைகள் நீங்கி சாதனைகள் மலரும்.
16.ஸ்ரீ ப்ரத்யங்கிரா ஹோமம்; சகல பயன்களும் போக்கி, சத்ருக்களிடம் வெற்றி பெற முடியும்.
. ஜோதிட ரீதியாக கிரக நிலைகளை ஆராய்ந்து உரிய ஹோமங்களை செய்து வாழ்வில் வளம் பல பெற்று வாழ்வோமாக.

சித்தர்கள் உணர்ந்த அண்டக்கல்

சித்தர்கள் உணர்ந்த அண்டக்கல்
#############################
( பகுதி - 1)
என்னுரை!
அன்பு நண்பர்களே!
மனிதனது தேடலுக்கான தூண்டு கோலும்,
தேடலுக்கு வழி காட்டுவதும், தேடப்படும்
பொருளும் ஒன்று மட்டுமே, அது
இயற்கைதான். இயற்கை மனிதனது தேடலைத்
தூண்டி தன்னைத் தானே மனிதனது வடிவில்
உணர்ந்து ஆனந்தம் கொள்கின்றது.
சித்தர் விஞ்ஞானத்தையும் அவர்கள் மனித
இனத்திற்கு இடைவிடாது கொடுத்துக்
கொண்டே இருக்கின்ற அறிவையும், நாம்
உணர்ந்து கொள்வதில் மிகவும்
பின்னடைந்திருக்கின்றோம். சித்தர்கள்
உணர்ந்தது பல்வேறு துறைகளில்
என்றிருந்தாலும் அதாவது மருத்துவம்,
ரசவாதம், மாயம், மந்திரம், யோகம் இப்படி பல
வகைகளாக இருந்தாலும் இவை
எல்லாவற்றிற்கும் ஒரு அடிப்படையான
மூலமான கண்டுபிடிப்பு இருந்தது.
சித்தர்கள் பாடல்களைப் படிப்பவர்களுக்கும்,
சித்தர்களின் விஞ்ஞானத்தை ஆராய்பவர்களுக்க
ும் ஒரு உயர் ரகமான புரியாத விசயம்
அண்டக்கல்.
ஆம், பிரபஞ்சத்தின் சக்தியையும் அதன்
ஆற்றலையும் உள்ளடக்கிய அண்டக்கல் ஒன்று
உண்டு என்பதனையும். இந்த அண்டக்கல்லை
பிரபஞ்சத்தின் விதை எனலாம் என்பதனையும்
கண்டார்கள்.
அந்தப் பிரதானப் பொருளினை பல சித்தர்களும்
பலவிதத்தில் சொன்னாலும் அதனை நாம்
ஒவ்வொருவரும் நமது சிந்தனையின்
வழியிலேயே உணர வேண்டும். இங்கு நான்
கூற வரும் இந்த நுட்பமான விசயம்
அனைவருக்கும் புரியாது. இருப்பினும் இந்த
பிரபஞ்சத்தில் இது போன்ற விசயங்களும்
உண்டு என்பதனை நாம் உணர்ந்தால் போதும்,
இதில் அவர் அவர்களின் தேடுதலின் ஆழத்தில்
அந்த முத்து கிடைக்கும்.
நானும் இங்கு அதனை சில குறிப்புகளின்
வாயிலாக மட்டுமே உணர்த்தப்போகிறேன்,
அவரவர்களின் புரிதலில் தான் இந்த இரகசியம்
வெளிப்படும். நாம் ஒவ்வொருவருக்கும்
இயற்கையின் அண்டக்கல் பாடத்தைப்
புரிவதற்கு இனிவரும் பகுதிகள் மிகுந்த
ஏதுவாக இருக்கும்.
நன்றி,
என்றும் அன்புடன்,
சி.எம்.ரங்கராஜ்.

பகுதி - 1
=======
சித்தர்கள் உணர்ந்தது என்ன?
1.சித்தர்கள் பாடல்களைப் படிப்பவர்களுக்கும்,
சித்தர்களின் விஞ்ஞானத்தை ஆராய்பவர்களுக்க
ும் ஒரு உயர் ரகமான புரியாத விசயம்
அண்டக்கல். சித்தர்களின் அனைத்து மருந்து,
மாந்திரீகம், சித்து, ரசவாதம் இப்படி எதை
எடுத்துக் கொண்டாலும் அதில்
இடைவிடாமல் சொல்லப்படும் ஒரு விசயம்
இதில் முப்பைச் சேர், அண்டத்தைச் சேர் ,
தத்துவாதிகளின் கல்லைச் சேர்,
ஐங்கோலக்கருவைச்சேர் இப்படி பல
பெயர்களில் ஒரு பொருளை மறைத்துக் கூறி
இருப்பார்கள். இதற்கு உரிய பொருளைத்
தெரிந்து உரிய வகையில் அந்தப் பொருளை
செய்து முடிக்கும் வல்லமை கொண்டவர்கள்
சொற்ப எண்ணிக்கையில்தான் உள்ளார்கள்.
அவர்களும் யாருக்கும் இந்த ரகசியத்தைச்
சொல்லவும் மாட்டார்கள்.
2.இந்த அண்டக்கல்லைப் பற்றி நம்
தமிழகத்தில் உள்ள சித்தர்கள் “பரிபாசை”
எனப்படும் மறைமொழியில் இதனை சொல்லி
வைத்ததற்கு காரணம் இல்லாமல் இல்லை.
இதனை புரிந்து கொண்டவர்கள் அனைத்து
சித்துக்களையும் செய்யலாம், இயற்கையின்
சரியான சூத்திரத்தைத் அறிந்து அதனை
தனது கட்டுப்பாட்டில் வைக்கலாம், சாகாமல்
வாழலாம் இன்னும் எத்தனை எத்தனையோ
விசயங்கள் இந்த அண்டக்கல்லைப் பற்றி
உண்டு. அதனால் தான் சித்தர்கள் இதனை
மறை மொழியில் வைத்து விளக்கியிருக்கி
ன்றார்கள் என்று இதனைத் தேடி
அலைந்தவர்களுக்குப் புரியும்.
3.இந்த அண்டக்கல்லைப் பற்றி சித்தர்கள்
குறிப்பிடும் போது, இதன் ரகசியம் யாருக்கும்
புரியாது என்றும், முயற்சி செய்து தெரிந்து
கொண்டவர்கள் யாருக்கும் சொல்லக் கூடாது
என்றும், சொன்னால் சித்தர்கள் சாபம்
அவர்களைப் பற்றும் என்றும் சொல்லி
இருக்கின்றார்கள். இருந்த போதிலும்
தற்போதைய சமூகம் செல்லும் பாதையை
நினைத்துப் பார்க்கும் பொழுது மனித இனம்
அதன் பரிணாம வளர்ச்சியில் அடுத்த
கட்டத்திற்கு செல்ல வேண்டிய ஒரு கட்டாய
நிலை தோன்றி இருக்கின்றது.
4.மனித இனம் பல்கிப் பெருகி உள்ள
சூழ்நிலையில் அதனுடைய இடையறாத
வளர்ச்சிக்காக இயற்கையைப் பயன்படுத்தி
இயற்கை வளங்கள் குறைய ஆரம்பித்து
இருக்கின்றன. எத்தனையோ உயிரினங்கள்
அழிந்தும் போய் விட்டன. உலகிற்கே
வழிகாட்டிய நமது தமிழ் மொழியின் வளங்கள்
அழிந்து கொண்டிருக்கின்றன. தமிழன் நமது
பாரம்பரிய அறிவையும் அவற்றைத் தேடி
வைத்த நமது முன்னோர்களின் வழியை
மறந்தும் மற்ற நவீன உலகின்
முன்னேற்றங்களைத் தான் உண்மை என்றும்
அவையே மனித இனத்தின் வழி என்றும் நம்பி
நமது முன்னோர்கள் கண்டறிந்த அறிவியலைப்
பற்றி உணராது இருக்கின்றார்கள்.
5.ஆகவே நமது தமிழினத்தின்
நன்மைக்காகவும் உலகின் பல பாகத்தில் நமது
தமிழ்நாட்டுச் சித்தர்கள் போன்று தோன்றி
இயற்கையின் அந்த கடைசிச் சூத்திரத்தை
சொன்ன பல சித்தர்களின் நோக்கத்தை எல்லா
வகையிலும் நிறைவேற்ற உபயோகமாக
இருக்கும் என்று நம்பி , அனைத்து உயிர்களின்
நன்மைக்காகவும் இது பற்றி ஒரு
அறிமுகத்தைத் தமிழ் உலகிற்குக் கொடுப்பது
தமிழன்னைக்கு செய்யும் சிறிய காணிக்கை
என்று எண்ணுகின்றேன்.
6.சித்தர்கள் அடைந்த அந்த அண்டக்கல்லின்
சக்தியை கொஞ்சம் சொன்னால் தான் இந்தப்
பகுதிகள் பற்றிய சுவாரசியம் இருக்கும்.
1.இந்தக்கல் பிரபஞ்சத்தின் விதை.
2.இதனைக் கொண்டு எதனையும்
படைக்கலாம்.
3.இதனை உடலுக்கான பிரபஞ்ச மருந்து
என்று சொல்லலாம்.
4.இதனை உயிருக்கான பிரபஞ்ச மருந்து என்று
சொல்லலாம்.
5.இதனை ஆன்மாவுக்கான பிரபஞ்ச மருந்து
என்று சொல்லலாம்.
6.இதனை உலோகங்களுக்கான பிரபஞ்ச
மருந்து என்று சொல்லலாம்.
7.இதனை கனிமங்களுக்கான பிரபஞ்ச மருந்து
என்று சொல்லலாம்.
8.இதனை விலங்குகளுக்கான பிரபஞ்ச மருந்து
என்று சொல்லலாம்.
9.இதனை தாவரங்களுக்கான பிரபஞ்ச மருந்து
என்று சொல்லலாம்.
10..இந்த பிரபஞ்ச விதையைக் கொண்டு
புதிய பிரபஞ்சத்தையே படைக்கலாம்.
11.இது ஒரு அழியாத சக்தி.
12.இறக்காமல் இருக்கலாம் .
13.இளமை மாறாமல் வாழலாம்.
14.ஐம்பூதங்களையும்படைக்கலாம்.
15.ரசவாதம் செய்யலாம்.
7.இன்னும் எத்தனை எத்தனையோ
விளக்கங்களையும் சிறப்பையும் இது
குறித்து சொன்னாலும் ஒரே சொல்லில்
கூறுவது என்றால் இதனை பிரபஞ்சத்தின்
அணைத்து செயல்களையும் உள்ளடக்கிய ஒரு
பிரபஞ்ச சூத்திரம் என்று கூறலாம். இது
எங்கே இருக்கின்றது எப்படி இருக்கின்றது
என்ற ஆவலை அறியமுடிகிறது.
பகுதி - 2
======
1. இந்த பிரபஞ்ச மருந்தை அறிவதற்கு முன்
நாம் இயற்கையைப் பற்றி கொஞ்சம் அறிந்து
கொள்வோம். அண்டக்கல்லைப் பற்றிய
தேடலில் உள்ள ஒவ்வொருவரும் இயற்கையின்
மாணவர்கள். அவர்களுக்கு பாடம் போதிக்கும்
ஆசிரியர் அந்த இயற்கையே தான். அதனால்
இனிவரும் வாக்கியங்களில் நம்மை நாமே
அண்டக்கல் மாணவன் என்று அழைத்துக்
கொள்ளலாம்.
2. அண்டக்கல் மாணவர்களாகிய நாம் முதலில்
இந்த இயற்கையின் போக்கை தினம் தோறும்
உன்னிப்பாகக் கவனித்து வர வேண்டும்.
இயற்கையின் மொழி அமைப்பு வேறு, நமது
மொழி அமைப்பு வேறு. மனிதர்களால்
பயன்படுத்தப்படும் மொழிகள் மனிதன்
நினைப்பவற்றையெல்லாம் பேசி
விடுவதற்கல்ல, நாம் நினைப்பவைகளை
அப்படியே பேசிவிடாமல் மறைப்பதற்குத்தான்
மொழி. அதே போல் இயற்கையின் மொழியை
நாம் முதலில் அது எதனை வெளிக்காட்டுகின
்றது, எதனை மறைக்கின்றது? என்பதனை நாம்
புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். இது
ஒன்றும் அவ்வளவு கடினமான வேலை
அல்ல.
3. இயற்கை மொழியை மனிதமனம் புரிந்து
கொள்ள திருமந்திரத்தின் கீழே சொல்லப்பட்ட
பாடலை நாம் படிப்போம்
மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதற் பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதற் பூதமே.
திருமந்திரம் 2264
அதாவது நாம் மரத்தால் செதுக்கப்பட்ட
ஒருயானையைக் காணும் போது அது
செதுக்கப்பட்ட மரம் நமது கண்ணுக்குத்
தெரியாமல் மறைந்துவிட்டது, செதுக்கப்படாத
ஒரு மரத்தில் யானை மறைந்து இருக்கின்றது.
பரம் எனப்படும் ஆகாயவெளி எனப்படும்
பிரபஞ்சத்தின் திரையை ஐம்பூதங்களும்
மறைத்து இருக்கின்றன, ஐம்பூதங்களை
உணர்ந்தால் பரம் எனப்படும் ஆகாயவெளி
இல்லை, பரம் எனப்படும் ஆகாயவெளியை
உணர ஆரம்பித்தால் அங்கே ஐம்பூதங்கள்
இல்லை. இந்தப் பாடலுக்கு வெளிப்படையாக
பொருள் சொல்லத் தேவையில்லை.
4. இன்னும் விளக்கமாக நாம் இயற்கையின்
முதல் பாடத்தை படிக்க வேண்டும் என்றால்
நம்முடைய ஐம் புலன்களின்
வல்லமையையும் அதன் பலவீனங்களையும்
அறிந்து கொள்ள வேண்டும். பிரபஞ்சத்தின்
மொழியைப் புரிந்து கொள்ள திருமந்திரத்தின்
கருத்தை ஒத்த ஜெர்மன் சித்தர் பாராசெல்சஸ்
பின்வருமாறு கூறுகின்றார்
All Things are concelaed in all one of them all
is the concealer of the rest -- their corporel
vessel, external, visible and movable. -
Paracelsus
எல்லாப் பொருட்களும் எல்லாப்
பொருட்களிலும் மறைந்து உள்ளது, நமது
கண்ணுக்கு வெளிப்படையாகத் தெரியக்
கூடிய ஒரு பொருள் அதில் மறைந்துள்ள மற்ற
எல்லாப் பொருட்களையும் மறைத்து உள்ளது.
அது அந்தப்பொருளின் வெளியே நாம்
உணரக்கூடிய பரு உடல், வெளிப்பகுதி
மற்றும் அதன் நகரும் நிலை.
5. நமது புலன்களில் நமது அறிவு
வளர்ச்சிக்கு மிக முக்கியமானது கண். இந்தப்
புலன் ஆனது ஒரு முழுமை பெற்ற எந்திரம்
கிடையாது. நமது கண்ணால் குறிப்பிட்ட
அதிர்வு அலைகளுக்கு மேல் உள்ள
பொருட்களைக் காண முடியாது, காற்றைக்
காண முடியாது, மிகச்சிறிய நுண்ணிய
பொருட்களைக் காண முடியாது.
அப்படி என்றால், நாம் நமது புலன் கண்
குறைவுடையது என்று உணர்ந்தும், நமது
கண்ணின் இந்தத்திறன் மனிதனின் அன்றாட
போராட்ட வாழ்க்கையை அடிப்படையாகக்
கொண்டு மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. நாம்
எல்லாப் பொருட்களையும் காண்பது நமது
கண்ணினால் அல்ல என்பதையும் வேறு
எதனால் நாம் ஒரு பொருளை பொருளாக
உணர்கின்றோம் என்பதையும் நாமே சிந்தித்து
அறிய வேண்டும்.
பகுதி - 3
=======
1. அண்டக்கல் மாணவர்களாகிய நாம்
இதுவரை நமது கண் ஒரு குறைப் புலன்
என்பதைப் பற்றிப் பார்த்தோம். நமது கண்
மட்டும் அல்ல நமது காது, மூக்கு, தோல்
இவையும் ஒரு குறைப்புலன்கள் தான் என்ற
அளவில் தெரிந்து கொண்டால் போதும். இது
பற்றி விளக்கமாக ஒரு முடிவுக்கு வர
விவாதம் ஏதும் வேண்டாம் நமது அண்டக்கல்
பற்றிய கற்றலுக்கும், அண்டக்கல் பற்றிய
அறிவை அடையவும் அது வேகம் சேர்க்காது.
2. அடுத்து நாம் இயற்கை பற்றி சில
புரிதல்களுக்குள் செல்வோம். இயற்கை
என்பதை புரிய முற்பட்டால், அதனை இப்படி
சொல்லலாமா? அது தான் கடவுள், இயற்கை,
இறை, பரம்பொருள் அல்லது நம்மை
அடிமைப்படுத்தி வைத்திருக்கும் சூத்திரதாரி
அல்லது அழகான கற்பனை, இப்படி அவரவர்
மனநிலைக்கு ஏற்றாற்போல் சொல்லிக்
கொண்டே போகலாம் .
3. இப்படிச்சொல்லலாமா? இயற்கையானது
தனது இயற்கையால் குதூகலிக்கின்றது.
இயற்கை ஆனது இயற்கையால்
ஆக்கப்பட்டுள்ளது, அது தன்னை
மேம்படுத்துகின்றது, குறைவுபடுத்துகி
ன்றது, இயற்கையானது இயற்கையைவிட
மேலானது, இயற்கைக்குச் சமம் இயற்கையே.
இதனைப் பின்வருமாறு கூறலாம்.
Nature enjoys its Nature, Nature contains
Nature, improves Nature, reduces Nature,
Nature is superior to Nature.
4. அண்டக்கல் மாணவர்களின்
ஒவ்வொருவருடைய ஆரம்பப் பாடமும்
இயற்கையை கூர்ந்து நோக்கல் என்பதில்
இருந்து தான் ஆரம்பிக்கின்றது. அண்டக்கல்
மாணவனுடைய இலக்கு அண்டக்கல்லை
அடைதல். ஏன் எனில் அண்டக்கல் மாணவனது
செயல் இயற்கையை அடிப்படையாகவே
கொண்டது.
5. அண்டக்கல் மாணவன் இங்கு
கற்றுக்கொள்ளப் போகின்ற முக்கியமான
விசயம் என்னவென்றால்
"அண்டக்கல் கலையானது இயற்கையை நகல்
எடுத்து, இயற்கையின் செயல் முறையை
விரைவு படுத்துதல் ஆகும். அதாவது
இயற்கையை காப்பியடித்து இயற்கையின்
வேலையை விரைவாக நாம் நினைக்கும்
வழியில் செய்ய இயற்கைக்கு வழிவகுத்தல்
ஆகும்"
"It is the art of imitating and accelarating
nature .It is a natural and art of science .We
do not make any thing, all we do is provided
a condition for nature to do what nature
does. So the philosopher's stone is not really
made by the student, and it is made by the
Nature."
6. ஆகவே முதலில் நாம் இயற்கையை உணர
முற்படுவோம். இயற்கையானது ஆண், பெண்
சக்தியாக இயங்குகிறது. பிரபஞ்சத்தில் உள்ள
எல்லாப் பொருட்களும் இந்த ஆண், பெண் சக்தி
விதிக்கு உட்பட்டே இயங்குகின்றது. எல்லாப்
பொருட்களிலும் இந்த ஆண், பெண் சக்தி
அடங்கி இருக்கின்றது. அதாவது யின், யாங்
என்று இந்த சக்தி அமைப்பைச்
சொல்லுவார்கள்.
7. இந்த ஆண் பெண் சக்தி அமைப்பானது
ஒவ்வொரு பொருள், உயிர் மற்றும் உயிரற்றது
என்று நாம் நினைக்கும் அனைத்து
இயக்கங்களிலும் அடங்கி இருக்கின்றது. அந்த
ஆண் பெண் சக்தி அமைப்பானது 50/50 என்ற
விகிதத்தில் கண்டிப்பாக ஒவ்வொரு
இயக்கத்திலும் கிடையாது. மாறாக ஒன்றின்
மீது ஒன்று ஆதிக்கம் செலுத்தி இயங்கி
வருகின்றது. அதனால் தான் மனிதர்களைக்
கூட யாரும் ஒரு முழு ஆணும் அல்ல, ஒரு
முழு பெண்ணும் அல்ல என்று கூறுவார்கள்.
இதனை உணர்த்தவே சிவனை
“அர்த்தநாரீசுவரர்” எனும் ஆண், பெண் சக்திக்
கலப்பாக உருவகப்படுத்தினார்கள்.

இதை வெளியிட்ட sibielixir.blogspot.com க்கு நன்றி 

ருத்ராட்சம் அணியும் முறை

ருத்ராட்சம் அணியும் முறை

ருத்ராட்சம் அணியும் முறை மற்றும் உண்மைத்தன்மை

ருத்ராட்சம் அணிவதாயின் முதலில் உண்மையான ருட்ரட்சத்தை அறிந்து வாங்க வேண்டும். ருத்ராட்சம் ஒரு முகத்தில் இருந்து இருபத்தியொரு முகங்கள் வரை உள்ளன. ஒரு இலந்தைப் பழத்தின் அளவுள்ள ருத்ராட்சம் மத்தியமான தரம், அதன் அளவு கூட கூட அதன் தரம் உயரும், அளவு குறைய குறைய தரம் குறையும்.

பத்ராட்சம் என்ற மணி ருத்ராட்சம் போலவே இருக்கும், அவை நல்ல பலன்களைத் தராது. உண்மையான ருத்ராட்சத்தை நீரில் போட்டால் மூழ்கி விடும் போலியானவை மிதக்கும். மேலும் கல்லில் உரைக்கும் போது தங்க நிற கோடுகள் கல்லில் பதியும். இரு செம்பு நாணயங்கள் நடுவில் ருத்ராட்சத்தை வைத்தால், மின் சுழற்சியின் காரணமாக அது சுழலும். இவ்வாறு உண்மையான ருத்ராட்சத்தை சில ஆய்வுகள் மூலம் கண்டறியலாம். தாவர வகைகளில் மின் காந்த சக்தி ஒரு குறிப்பிடும் அளவு உள்ளது ருட்ராட்சதில் மட்டும்தான்.

ருத்ராட்சத்தை அணிவதாயின் சிவப்பு நிற நூலில் அணியவேண்டும். அல்லது செம்புக் கம்பியிலோ, தங்கக் கம்பியிலோ, வெள்ளிக் கம்பியிலோ அணியலாம். ஒரு சிவனடியாரிடம் இருந்து ருத்ராட்சத்தை அணியும் வழிமுறைகளை கேட்டு தெரிந்து கொள்வது நல்லது.

ஒரு நன்னாளில் நமக்குகந்த ருத்ராட்சத்தை வாங்கி சுத்தமான நீரில் கழுவிய பின்பு காய்ச்சாத பசும்பால், தேன், கற்கண்டு பொடி, நெய், தயிர் ஆகிய ஐந்து பொருட்களையும் ஒன்றாக கலந்து அபிசேகம் செய்ய வேண்டும். பிறகு சுத்தமாக துடைத்துவிட்டு ஒரு வளர்பிறை திங்கட்கிழமை அதிகாலையில் திருகோவிலில் பூஜை செய்து அணியவேண்டும்.

ருத்ராட்சத்தை தினமும் அணிவதற்கு முன்பாக நமது இஷ்ட தேவதா மந்திரத்தை நிச்சயமாக சொல்ல வேண்டும். சர்வ மந்திரங்களும் வசியம் ஆகக்கூடிய சிறந்த காந்த ஈர்ப்பு மண்டலத்தைக் கொண்டது ருத்ராட்சம்.

ஒரு முக ருத்ராட்சம்
ஏக முக ருத்ராட்சம் சூரியனுக்கு உரியது, சகலவிதமான பித்ரு தோஷங்களை விலக்கி எல்லா நலன்களையும், நல்ல வாழ்வையும் தரக்கூடியது. ஏக முகம் எனப்படும் ருத்ராட்சம் மிகவும் அரிதான ஒன்று, பல வருடங்களுக்கு ஒரு முறையே தோன்றக்கூடியது. சிவபெருமானின் பூரண அருளை தரக்கூடியது. இதனை ஒரு படி அளவுள்ள எதாவது ஒரு தானியத்தின் அடியில் வைத்தால் தானாகவே மேல வரக்கூடிய தன்மை உள்ளது என்று ஒரு பழமையான நூல் தெரிவிக்கிறது.
மந்திரம்: ‘ஓம் ஹ்ரீம் நம’

இரு முக ருத்ராட்சம்
த்விமுக ருத்ராட்சம் அர்த்தநாரீஸ்வரருக்கும், நவக்கிரகங்களில் சந்திரனுக்கும் உரியதாகும். இதை அணிவதால் குடும்ப உறவுகளில் நல்ல சுமுகமான போக்கு நிலைக்கும். நம் உடலில் இருக்கும் நீர்த்தன்மையில் நன்மை தரத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும். ஜாதகத்தில் சந்திர பலம் குறைதவர்களும், மனோ ரீதியான சிக்கல்களால் பாதிக்கப்பட்டவர்களும் இருமுக ருத்ராட்சம் அணிவதால் நல்ல பலன்களை பெறலாம்.
மந்திரம்: ‘ஓம் நம’

மூன்று முக ருத்ராட்சம்
திரிமுக ருத்ராட்சம், அக்னி அம்சம் பெற்றது, செவ்வாய்க்கு உரியது. மனதில் தைரியத்தையும், துணிவையும் தருவதோடு உடலியக்கத்தில் துடிப்பான செயல்திறனையும் உண்டாக்கும். விளையாட்டுத் துறை, ராணுவத்துறை, தொழிற்சாலை போன்றவற்றில் உள்ளவர்கள் அணிந்தால் நல்ல பலன்களை தரும்.
மந்திரம்: ‘ஓம் க்லிம் நம’

நான்கு முக ருத்ராட்சம்
சதுர்முக ருத்ராட்சம் பிரம்மாவின் அம்சம் கொண்டது, புதனுக்கு உரியது. இதையணிவதால் சுவாச கோளாறுகள் கட்டுப்படும், திக்குவாய் உள்ளவர்களுக்கு பேச்சுத்திறன் மேம்படும். கணிபொறி, மின்னியல் ஆய்வுகள், நிர்வாக பொறுப்பு போன்றவற்றில் உள்ளவர்கள் இதை அணிவதால் நல்ல பலன்களை பெறலாம்.
மந்திரம்: ‘ஓம் ஹ்ரீம் நம’

ஐந்து முக ருத்ராட்சம்
பரவலாகக் காணக்கிடைக்கும் பஞ்சமுக ருத்ராட்சம் சிவ அம்சம் பொருந்தியது, குரு பகவானுக்கு உரியது. கல்வி அறிவையும், மனத்தின் சமநிலையையும் ஏற்படுத்தும். இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும், மேலும் இரத்த அழுத்தம் சமந்தமான நோய்களை நீக்கும். இது ஒரு காந்த ஆற்றலை உள்ளடக்கியது, நம்மை சுற்றி ஒரு கவசம் போன்று காப்பாற்றும்.
மந்திரம்: ‘ஓம் ஹ்ரீம் நம’

ஆறு முக ருத்ராட்சம்
சண்முக ருத்ராட்சம் முருகப்பெருமானின் அம்சம் கொண்டது, சுக்ரனுக்கு உரியது. மனத்தின் வசீகர சக்தியை மேம்படுத்தும். தொழில் ரீதியாக மற்றும் வெகுஜனத் தொடர்பு உள்ளவர்கள் அணிந்தால் ஜனவசிய சக்தியை பெற்று நல்ல பலன்களை பெறலாம்.
மந்திரம்: ‘ஓம் ஹ்ரீம் நம’

ஏழு முக ருத்ராட்சம்
சப்தமுக ருத்ராட்சம் மகாலட்சுமியின் அம்சம் கொண்டது, சனீஸ்வர பகவானுக்கு உரியது. சனிபகவானின் அலைவீச்சை சாதகமாக நன்மை தரும் விதமாக மாற்றக்கூடியது. வறுமை நீங்கவும், ஏழரை சனி மற்றும் சனி கிரக தோஷம் போன்றவற்றில் இருந்து விடுபட உதவும். இந்த ருத்ராட்சத்தை உடலில் அணிவதை விட பூஜை அறையில் வைத்து முறைப்படி வணங்குவதே நல்லது.
மந்திரம்: ‘ஓம் ஹம் நம’

எண் முக ருத்ராட்சம்
அஷ்டமுக ருத்ராட்சம் விநாயகப் பெருமானின் அம்சம் கொண்டது, இராகுவின் அலைவீச்சை கட்டுப்படுத்தக் கூடிய காந்த மண்டல சுழற்சியை உடையது. ருத்ராட்சங்களிலேயே மிகவும் கவனமாக சோதனை செய்தபின்பு பூஜை அறையில் வைத்து முறைப்படி வணங்குவதே நல்லது. பெரும்பாலும் உடலில் அணிவதை தவிர்க்கப்படுகிறது. இந்த ருத்ராட்சம் நூதனமான அனுபவங்களை தரக்கூடியது, ஒருவரை அறிவியலின் அடிப்படைக்கு உட்படாத புதிரான விளைவுகளுக்கு உண்டாக்க கூடிய அதீத சக்தியின் சுழற்களம் அமையப்பெற்றது.
மந்திரம்: ‘ஓம் ஹம் நம’

ஒன்பது முக ருத்ராட்சம்
நவமுக ருத்ராட்சம் அன்னை பராசக்தி, அத்யா சக்தியின் அம்சம் கொண்டது, கேதுவுக்கு உரியது. கேதுவின் கெடு பலன்கலான அடிபடுதல், கெட்ட கனவுகள், எதிர்மறை எண்ணங்கள் போன்ற சங்கடங்களை தீர்க்கும். இதனை அணிவதால் பொறுமையும், நிதானமும் நிலை நிற்பதோடு, மனதில் பயம் சார்ந்த உணர்வுகள் யாவும் விலகி விடும். பிற மொழிகளில் நிபுணத்துவம், இலக்கண, இலக்கியம் சார்ந்த அறிவின் மேம்பட்ட நிலைக்கு கொண்டு செல்லும்.
மந்திரம்: ‘ஓம் ஹ்ரீம் நம’

பத்து முக ருத்ராட்சம்
தசமுக ருத்ராட்சம் மகாவிஷ்ணுவின் அம்சம் கொண்டது, தசாவதாரங்களையும் குறிப்பது போல பத்து முகங்களை கொண்டது. ஹரிஹரர்களின் திருவருளை ஒருங்கே பெற்று தருவதாக நம்பப்படுகிறது.
மந்திரம்: ‘ஓம் ஹ்ரீம் நம’

பதினோரு முக ருத்ராட்சம்
ஏகதச ருத்ராட்சம் ருத்ர அவதாரமான ஆஞ்சநேயரின் அம்சம் கொண்டது. மனத்தின் ஆற்றலை பன்மடங்காக ஆக்கக் கூடியது. பிரம்மச்சரியத்தில் நிலை பெற விரும்புவோர் இதனை அணிந்து நற்பயன் பெறலாம்.
மந்திரம்: ‘ஓம் ஹ்ரீம் ஹம் நம’

பன்னிரு முக ருத்ராட்சம்
துவாதச ருத்ராட்சம் சூரிய பகவானின் திருவருளை பெற்றுத்தரக் கூடியது. அரசுத்துறை சார்ந்த வேலைவாய்ப்பை எதிர்பார்பவர்கள், பணியில் உயர்வு பெற விரும்புபவர்கள், ஆன்மிக பலம் வேண்டுவோர் இந்த பன்னிரு முக ருத்ராட்சம் அணியலாம்.
மந்திரம்: ‘ஓம் க்ரௌம் ஷௌம் ரௌம் நம’

Tuesday 12 January 2016

திருமண தடை நீக்கும் ஸ்லோகம்




ஓம் ஹ்ரீம் யோகினி யோகினி
யோகிச்வரி யோக பயங்கரி
ஸகல ஸ்தாவர ஜங்கமஸ்ய
முக ஹ்ருதயம் மம வஸமாகர்ஷய
கர்ஷய ஸ்வாஹா

பொதுப் பொருள்: ஹ்ரீம் எனும் பீஜத்தில் உறைபவளே,
யோகினியே, யோகேஸ்வரியே, சகல ஜீவன்களும் எனக்கு வசமாக அருள்புரிவாய் அம்மா.

- இந்த ஸ்லோகம் தேவி வழிபாட்டில் ஸ்வயம்வர கல்யாணி என்று போற்றப்படுகிறது. ருக்மணி கிருஷ்ணனை இத்துதியை ஜபித்தே மணந்தாள். பார்வதியாக அவதரித்தபோது உமாதேவி இத்துதியை பராசக்தியைக் குறித்து துதித்தே ஈசனை மணந்தாள். இத்துதியை வெள்ளிக்கிழமைகளிலும் அஷ்டமி தினத்தன்றும் குறிப்பாக பங்குனி உத்திர தினத்தன்றும் பாராயணம் செய்தால் தேவியின் திருவருளால் தடைகள் நீங்கி, திருமணம் மகிழ்ச்சி பொங்க நடைபெறும்.

சொர்ண பைரவர் போற்றி



ஓம் ஸ்ரீம் தனவயிரவா போற்றி
ஓம் ஸ்ரீம் தத்துவ தேவா போற்றி
ஓம் ஸ்ரீம் தயாளா போற்றி
ஓம் ஸ்ரீம் தனநாதா போற்றி
ஓம் ஸ்ரீம் தனத்தேவா போற்றி
ஓம் ஸ்ரீம் குலதேவா போற்றி
ஓம் ஸ்ரீம் குருநாதா போற்றி
ஓம் ஸ்ரீம் குண்டலினி தேவா போற்றி
ஓம் ஸ்ரீம் குபேரா போற்றி
ஓம் ஸ்ரீம் குணக்குன்றே போற்றி
ஓம் ஸ்ரீம் வயிரவா போற்றி
ஓம் ஸ்ரீம் வளந்தருவாய் போற்றி
ஓம் ஸ்ரீம் வற்றாத தனமே போற்றி
ஓம் ஸ்ரீம் வனத்துறை வாழ்வே போற்றி
ஓம் ஸ்ரீம் திருவுடைச் செல்வா போற்றி
ஓம் ஸ்ரீம் தினந்தினங்காப்பாய் போற்றி
ஓம் ஸ்ரீம் திருமண தேவா போற்றி
ஓம் ஸ்ரீம் திருவருள்திரண்டாய் போற்றி
ஓம் ஸ்ரீம் திருவடி காட்டுவாய் போற்றி
ஓம் ஸ்ரீம் சித்தர்கள் வாழ்வே போற்றி
ஓம் ஸ்ரீம் சித்தருக்குச் சித்தா போற்றி
ஓம் ஸ்ரீம் சித்திகள் எட்டே போற்றி
ஓம் ஸ்ரீம் சித்தாந்த வடிவே போற்றி
ஓம் ஸ்ரீம் சித்திகள் முடித்தாய் போற்றி
ஓம் ஸ்ரீம் முழுநிலவானாய் போற்றி
ஓம் ஸ்ரீம் முனிவர்கள் மருந்தே போற்றி
ஓம் ஸ்ரீம் முழு தனம் தருவாய் போற்றி
ஓம் ஸ்ரீம் முடியாதன முடிப்பாய் போற்றி
ஓம் ஸ்ரீம் முகிழ் நகை வயிரவா போற்றி
ஓம் ஸ்ரீம் இரும்பைப் பொன்னாக்கினாய் போற்றி
ஓம் ஸ்ரீம் இருந்தருள் செய்ய வந்தாய் போற்றி
ஓம் ஸ்ரீம் இலுப்பைக்குடி வயிரவா போற்றி
ஓம் ஸ்ரீம் சொர்ண வயிரவா போற்றி போற்றி போற்றி

கிரக தோஷம் போக்கும் காமாட்சி அம்மன் ஸ்லோகம்




ததாநோ பாஸ்வத்தாம் அம்ருதநிலயோ லோஹிதவபு:
விநம்ராணாம் ஸெளம்யோ குருரபி கவித்வம் ச கலயந்!
கதௌ மந்தோ கங்காதர-மஹிஷி காமாக்ஷி பஜதாம் தம:
கேதுர்-மாத:ஸ்தவ சரணபத்மோ வியதே!!

சூரியன் முதல் கேது வரையான ஒன்பது கிரகங்களின் சமஸ்கிருதப் பெயர் இந்த ஸ்லோகத்தில் உள்ளது. அம்பாளின் திருவடியை இந்த கிரகங்களெல்லாம் பற்றிக் கொண்டிருக்கின்றன அல்லது பார்த்துக் கொண்டிருக்கின்றன. ஏனெனில், அந்த திருவடியில் இருந்து அமிர்தமே கொட்டுகிறது. அவளது பாத தரிசனம் அவ்வளவு விசேஷமானது.

அப்போது, இந்த கிரகத்தால் எனக்கு இவ்வளவு பிரச்னை என முறையிட்டோமானால், அவளது கடைக்கண் பார்வை அந்த கிரகத்தின் மீது திரும்பும். அப்போது அந்த கிரகம் கைகட்டி வாய் பொத்தி அம்பாளின் உத்தரவைக் கேட்கும்.

கிரக தோஷம் என்பது கடுகளவும் இராது. அமிர்தம் குடித்தோருக்கு பிறப்பு இறப்பு இல்லை. ஆம்...நமக்கு இப்பிறப்பில் கிரக தோஷமில்லாத இன்ப வாழ்வும், இனி பிறப்பில்லை என்ற பேரானந்த வாழ்வும் கிடைக்கும்.

பணம், தங்கம் சேர ஸ்ரீ ஸ்வர்ண கணேசர் மந்திரம்



ஓம் நமோ ஹேரம்ப
மதமோதித ஹஸ்தி முகாய
மம ஸ்வர்ண ப்ராப்தம்
குருகுரு ஸ்வாஹா

இம்மந்திரத்தை தினமும் உங்கள் வீட்டுப்பூஜையறையில் 108 முறை வீதம் ஜபித்து வரவேண்டும். இப்படி குறைந்தது 90 நாட்கள் (மாதவிலக்கு நாட்கள் தவிர்த்து) ஜபித்து வந்தால் வீட்டில் பணம், தங்கம் சேரும்; மிச்சமாகும்.

முக வசிய மந்திரம்

நமது முகத்தில் லட்சுமி கடாட்சம் உண்டாகுவதற்கும் மற்றவர்கள் எம்முடன் கோபப்படாமலும் நன்றாக பழக இம் முகவசிய முறையினை பயன்படுத்தலாம்.

ஓம் வெள்ளி என்முகம்
வியாழன் என்முகம்
திங்கள் என்முகம்
திசைகள் எட்டும் என்முகம்
காளி என்முகம்
காயத்ரி என்முகம்
நீலி என்முகம்
நீலகண்டி என்முகம்
ராமரும் லட்சுமணரும் போலே
அம்மா தாயே லட்சுமணர் எல்லோரும்
பார்த்தால் போலே சிரித்த முகமும்
சீதாதேவியார் நிற்க
 சிதம்பர அட்சரத்தின் மேல் ஆணை
ஐந்தெழுத்து பஞ்சாட்சரமும்
என்முகத்தில் நிற்கவே சுவாகா.


- பவுர்ணமி தினத்தில் உரு 108 கொடுத்து சித்திசெய்து கொள்ளவும். பின்னர் பிரயோகிக்கும் போது 21 தரம் சொல்லி விபூதி சாத்தவும்.

குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க மந்திரம்



ஓம் நமோ பகவதே தட்சிணாமூர்த்தயே மஹ்யம்
மேதாம் ப்ரக்ஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா

* சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு இம்மந்திரத்தை மனப்பாடம் செய்து தினமும் உச்சரிக்க செய்ய வேண்டும்.

* நேர்முக தேர்வு செல்லும்போதும் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம்.

* ஆசிரியர்கள், வக்கீல், ஜோதிடர்கள், அரசியல்வாதிகள் போன்றவர்களுக்கு முன்னேற்றம் தரும் மந்திரம் இது.

பஞ்சமி திதியில் சொல்ல வேண்டிய மந்திரம்



அமாவாசையிலிருந்து ஐந்தாம் நாள், பவுர்ணமியில் இருந்து ஐந்தாம் நாள் இந்நாட்களில் வருவது பஞ்சமி திதி. ’பஞ்ச’ என்றால் ஐந்து என்று பொருள். பஞ்சமி திதியன்று குத்துவிளக்கில் ஐந்து எண்ணெய் கலந்து ஐந்து முகத்தினையும் ஏற்றி கல்கண்டு அல்லது பழம் நைவேத்தியம் செய்து சுலோகங்கள் கூறி விளக்கிற்கு பூஜை செய்யவும். தீபத்தில் எரியும் ஐந்து முகங்களில் ஏதாவது ஓர் தீபத்தை உற்றுப் பார்த்தபடியே மனதை ஒரு முகப்படுத்தி நம்முடைய வேண்டுதல்களை மனதிற்குள் சொல்லி வந்தால் அது நிச்சயம் நிறைவேறும்.

இப்படி ஜோதியை நோக்கி வழிபடும்போழுது

’ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லவும்.

இப்படிச் செய்தால் அம்பிகையின் அருளால் நமது வேண்டுதல்கள் நிறைவேறும்.

Monday 11 January 2016

காக்கையை பித்ருக்களாக நினைப்பது ஏன்?

காக்கையை பித்ருக்களாக நினைப்பது ஏன்?

காக்கை கரைவதற்கும், சகுனம் போன்றவற்றுக்கும் அதிக முக்கியத்துவம் தருவது ஏன்?

சிருஷ்டியில் மனிதனை விட பறவைகள் மற்றும் மிருகங்களுக்கு ஒருசில விசேஷ சக்திகள் இறைவனால் அருளப்பட்டுள்ளன.

குறிப்பாக முன் ஜன்மத் தொடர்பும், முற்பிறவி நினைவாற்றலும் பசு, நாய் போன்ற சில மிருகங்களுக்கும், காக்கை, கருடன் போன்ற சில பறவைகளுக்கும் உண்டு.

இவ்வுலகில் சில காலம் வாழ்ந்து இறந்துவிட்ட முன்னோர்கள், அவரவர்களின் கர்மவினைக்கேற்ப மரம், செடி, கொடி, புழு, பூச்சி, பறவை, மிருகம், மனிதன் போன்ற பற்பல வடிவில் மறுபிறவி எடுக்கிறார்கள்.

ஆனாலும், இவ்வாறு மறுபிறவி எடுக்கும் முன்பாக பித்ருக்கள் சில காலம் காக்கை வடிவில் இருப்பார்கள். அதன்பின்னரே அவர்களின் கர்ம வினைகள் யமதர்ம ராஜ சபையில் ஆராயப்பட்டு அவரவர்களுக்குரிய பிறவிகள் தீர்மானிக்கப்பட்டு வேறு பிறவிகளை எடுக்கிறார்கள்.

ஆக, ஒவ்வொருவரும் இறந்த பின்னர் சில காலம் (இறந்தவருக்கான அடுத்த பிறவி தீர்மானமாகும் வரை) காக்கை வடிவில் இருக்க வேண்டும் என்பது நியதி. ஆகவேதான், காக்கையை பித்ருக்கள் வடிவில் காண்கிறோம். மேலும், இறந்தவர்களுக்காக சிராத்தம் செய்யப்படும்போது (திதி கொடுக்கும்போது), இறந்தவரின் பெயரைச் சொல்லி அளிக்கப்படும் பிண்டத்தை (சாத உருண்டையை) காக்கைக்கு வைக்க வேண்டும் என்றும், அந்த சாதத்தை காக்கைகள் சாப்பிடுவதால் பித்ருக்களான முன்னோர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்றும் தர்ம சாஸ்திரம் கூறுகிறது.

குருவி, காக்கை, கருடன் போன்ற பறவைகள் எழுப்பும் சப்தத்தின் (ஒலியின்) மூலம் எதிர்கால நிகழ்வைத் தெரிவிப்பது ‘சகுன சாஸ்திரம்’ எனப்படும்.

இதில், பறவைகள் எழுப்பும் ஒலிக்கு, அந்த ஒலியை எழுப்பும் பறவை, ஒலி எழும் காலம், திசை ஆகியவற்றுக்கு ஏற்ப தனித்தனி பலன்கள் உண்டு. அதன்படி காக்கை எழுப்பும் ஒலிக்கும் தனிப் பலன் உண்டு.

நமது பார்வைக்கு, மற்ற பறவைகளைக் காட்டிலும் காக்கைகளே அதிகமாகக் காணப்படுவதாலும், காக்கை எழுப்பும் சப்தம் மற்ற பறவைகளின் சப்தத்தைவிட சற்று அதிகமாக இருப்பதாலும், காக்கை எழுப்பும் சப்தத்தின் பலன் நமது நினைவில் இருக்கிறது, மற்ற பறவைகள் எழுப்பும் சப்தத்தின் பலன் நினைவில் இருப்பதில்லை.

இதையொட்டியே காக்கை சப்தித்தால் (கரைந்தால்) விருந்தாளி வரப் போகிறார் போன்ற சிற்சில சகுன சாஸ்திர பலன்கள் நம்மால் நினைவு கூரப்படுகின்றன.

12 ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய தானங்கள்-பலன்கள்

ஒவ்வொரு ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-
மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாட்டை தவறாமல் செய்ய வேண்டும். சிவன்கோவில்களுக்கு சென்று வரும்போது வாசலில் உள்ள ஏழைகளுக்கு தவறாமல் தானம் செய்ய வேண்டும். பணக்காரராக விரும்பும் மேஷ ராசிக்காரர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான பொருட்களை தானம் செய்தால் பலன் கிடைக்கும்.
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்கள் செவ்வாய்கிக் கிழமைகளில் சாம்பார் சாதம் தானம் செய்ய வேண்டும். இதனால் செல்வம் பெருகும். மேலும் ஏழை பெண்களின் திருமணத்துக்கு உங்களால் முடிந்த பொருட்களை தானம் செய்யுங்கள். இதனால் தடையில்லாத முன்னேற்றம் ஏற்படும்.
மிதுனம்: மிதுன ராசிக்காரர்கள் தவறாமல் பித்ரு வழிபாடு செய்ய வேண்டும். புதன்கிழமைகளில் பெருமாளை தரிசனம்செய்து வெண் பொங்கலை உங்களால் முடிந்த அளவுக்கு தானம் கொடுங்கள். எல்லாவித செல்வமும் தேடி வரும்.மேலும் ஏழை மாணவர்களுக்கு படிப்புக்கு பண தானம் கொடுப்பதும் நல்லது.
கடகம்: கடக ராசிக்காரர்கள் பசுமாட்டுக்கு உணவு தானம் செய்வதை வழக்கமாக கொள்ள வேண்டும். இது குடும்பத்தில் வறுமையை விரட்டி செல்வத்தை சேர்க்க உதவும். மேலும் ஏழை நோயாளிகளுக்கு மருந்து வாங்கி தானம் கொடுத்தால் உங்களுக்கு நிம்மதியான வாழ்வு கிடைக்கும்.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் ஏழை எளியோர்களுக்கு அடிக்கடி தயிர் சாதம் தானம் செய்ய வேண்டும். இதனால் உங்கள் மனதில் அமைதி ஏற்படும். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையானதை கேட்டு வாங்கிக்கொடுங்கள். அது புண்ணியத்தை சேர்க்கும்.
கன்னி: கன்னி ராசிக்காரர்கள் குருபகவானை தவறாமல் வழிபடவேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோதுமையால் ஆன இனிப்பு மற்றும் உணவு பொருட்களை தானம் செய்ய வேண்டும். மேலும் ஏழை மாணவர்களுக்கு நோட்டு, பென்சில், பேனா வாங்கிக் கொடுக்காலாம். இது உங்களை முன்னேற்றும்.
துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு விநாயக வழிபாடு கைகொடுக்கும். அடிக்கடி ஏழை எளியோர்களுக்கு வெண் பொங்கல்தானம் செய்யுங்கள். இதனால் புதிய சொத்துக்கள் வந்து உங்களுக்கு சேரும். மேலும் ஆதரவற்ற இல்லங்களில் தங்கி படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு படிப்பு உதவித்தொகை தானமாக கொடுத்தால் உங்கள் வாரிசுகளுக்கு நல்லது.
விருச்சகம்: விருச்சக ராசிக்காரர்கள் தங்களால் இயன்ற அளவு மாற்றுத்திறனாளிகளுக்கு தானம் செய்ய வேண்டும். கடன்கள் தீர லட்சுமி நரசிம்மரை வழிபட்டு பானகம் தானம் செய்யலாம். மேலும் அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் தானம் செய்தால் பண வரவு அதிகரிக்கும்.
தனுசு: தனுசு ராசிக்காரர்கள் தவறாமல் முருகனை வழிபட வேண்டும். குருபகவானுக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து பிறகு பக்தர்களுக்கும் தானம் செய்யலாம். வாரம் ஒரு முறை செவ்வாய் அல்லது வெள்ளியில் துர்க்கை அம்மனுக்கு மலர் தானம் செய்யலாம். மேலும் செவ்வாய்க் கிழமைகளில் சாம்பார் சாதம் தானம்செய்தால் வாழ்வு செழிக்கும். மேலும் வயதான பெண்களுக்கு தானம் செய்தால் நல்லது.
மகரம்: மகர ராசிக்காரர்கள் ஏழை பெண்களின் திருமணத்துக்கு உங்களால் முடிந்ததை தானமாக கொடுக்க வேண்டும். மேலும் வாயில்லா ஜீவன்களுக்கு தீவனம் வாங்கி கொடுக்கலாம். கோவில்களில் சீரமைப்பு பணிகள் நடக்கும்போது தானம் செய்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
கும்பம்: கும்ப ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாடை மறக்காமல் செய்ய வேண்டும். ஏழைகளுக்கு கதம்ப உணவை அடிக்கடி தானமாக கொடுக்க வேண்டும். இதனால் உங்களுக்கு வரும் பண வரவு இரட்டிப்பாகும். மேலும் ஏழை நோயாளிகளுக் மருந்து மாத்திரி வாங்கி கொடுத்தால் வளமான வாழ்வு அமையும்.
மீனம்: மீன ராசிக்காரர்கள் பவுர்ணமி நாட்களில் சிவ தரிசனம் செய்வது நல்லது. ஏழை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவினால் புண்ணியம் அதிகரிக்கும். மேலும் நல்லெண்ணை தீபம் தானம் செய்யலாம். அய்யப்ப பக்தர்களுக்கு உதவினால் கூடுதல் நன்மை உண்டாகு

Sunday 10 January 2016

தியானத்தின் பலன்கள்

தியானத்தின் பலன்கள் சில :

கவனம் அதிகரிக்கும்.
எதிர்ப்புசக்தி அதிகரிக்கும்
மன நலம் மேம்படும்
வலியைத் தாங்கும் உறுதி கிடைக்கும்
சக்தி நிலை உயரும்
பிரச்னைகளை எதிர்கொள்ள முடியும்
மன அழுத்தம் மறையும்.
வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகள் நீங்கும்
சுவாசம் சீராகும்.
இதயம் பலப்படும்
புத்தி கூர்மையடையும்

மன அமைதியுடன் மகிழ்ச்சியாக வாழவே நாம் விரும்புவோம். அதற்கு ஆழ்நிலை தியானம் ஒன்றே சிறந்த வழி. எனவே நன்றே செய்க அதை இன்றே செய்க. வாழ்க வளமுடன்!

கொய்யா இலை இருக்க கவலை ஏன்?

கொய்யா இலைகளை கொதி நீரில் போட்டு கஷாயமாக்கிக் குடித்தால், உதிரப் போக்கு தடைபடும். மேலும் கொய்யா இலை கஷாயத்தை தினமும் வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தைராய்டு சுரப்பு சமநிலைக்கு வரும்.
கொய்யாப் பழம் மலச்சிக்கலைப் போக்கும். கொய்யா இலை கஷாயம் வாந்தி-பேதியைத் தடுக்கும். ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால் கொய்யா இலையைக் காய்ச்சி கொப்பளிக்கலாம்.
கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு தருகின்றன.
கொய்யா மரத்தின் இளம், புதுக் கிளைகளின் இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.
கொய்யா இலைகளை வாயில் போட்டு மென்றால், வயிற்றுப் புண், பல் வலி நீங்கும்.

தீபம் பேசும் மந்திரம்

ஏதாவது ஒரு அமாவாசை அன்று 50 கிராம் பசுநெய்யும், 50 கிராம் நல்லெண்ணையும், தாமரை நூல் திரியும் வாங்கிக் கொள்ள வேண்டும். இதை நம் வீட்டில் இருக்கும் திருவிளக்கில் போட்டு தீபம் ஏற்ற வேண்டும். விளக்கில் இருந்து நான்கு அடி தூரம் தள்ளி சுத்தமான மஞ்சள் விரிப்பு விரித்து அதில் நிமிர்ந்து உட்கார வேண்டும்.



நமது புருவமத்திக்கு நேராக தீபம் எரிய வேண்டும். 108 முறைக்கு குறையாமல் தினமும் பின்வரும் மந்திரம் ஜபித்து வரவேண்டும். வாயாலும் சொல்லலாம்.

’ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் நமோ பகவதி தீபிகா ஜோதி சொரூபணி ஆகர்ஷய ஆகர்ஷய வாவா ஸ்வாஹா’

சரியாக 90 தினங்களுக்குள் தீபம் உங்களுடன் பேசுவதை நீங்கள் சூட்சுமமாக உணர முடியும். உங்கள் எதிர்காலத்தையும், உங்கள் அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வையும், எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் தடங்கல்களைத் தாண்டும் வழிமுறைகளையும், நீங்கள் கண்கூடாக உணர முடியும். இந்த பயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்ததும் கண்டிப்பாக அசைவம், மது, புகை தவிர்க்க வேண்டும்.

ஜன வசியம் கொடுக்கும் துர்க்கை ஸ்லோகம்

இந்த துர்க்கை ஸ்லோகத்தை பாராயணம் செய்வதால் சர்வ ஜன வசியம் ஏற்படும் என புராணங்களில் கூறப்பட்டுள்ளது





துர்கே ஸம்ருதா ஹரஸி பீதி-மசேஷ ஜந்தோ:

ஸ்வஸ்தை: ஸ்ம்ருதா மதிமதீவ சுபாம் ததாஸி

தாரித்ர்ய-து:க-பய-ஹாரிணி கா த்வதந்யா

ஸர்வோபகார- கரணாய ஸதார்த்ர-சித்தா

நாகதோஷம் நீங்க, புத்திர பாக்கியம் கிட்ட ஸ்லோகம்

ஸ்தம்பகாகார கும்பாக்ரோ ரத்னமௌளிர் நிரங்குஸ:|
ஸர்ப்பஹார கடீசூத்ர : சர்ப்ப யக்ஞோபவீதவாந் ||
ஸர்ப்பகோடீர கடக: சர்ப்ப க்ரைவேய காங்கத:|
ஸர்ப்ப கக்ஷோதராபந்த: ஸர்ப்பராஜோத்தரீயக:||
சர்வ வஸ்யகரோ கர்ப்பதோஷஹா புத்ரபௌத்ரத :||

- இந்த ஸ்லோகத்தைத் தினமும் 18 தடவை மேற்கு நோக்கி அமர்ந்து ஜெபித்து வர சர்ப்பதோஷம் நீங்கும். சர்ப்ப தோஷத்தினால் குழந்தை பாக்கியம் உண்டானால் அது விலகி குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதை அரசமரமும், வேப்பமரமும் இணைந்த இடத்தில் உள்ள விநாயகரின் முன் ஜெபிக்க நிறைவான பலன் கிடைக்கும்.

நினைத்தது நிறைவேற வாராஹி மந்திரம்





ஓம் வராஹமுகி வித்மஹே
ஆந்த்ராஸனீ தீமஹி
தன்னோ யமுனா ப்ரசோதயாத்

- இந்த மந்திரத்தை தினமும் பயபக்தியுடன் சொல்லி வந்தால் நினைத்தவை அனைத்தும் நிறைவேறும்.

ஸ்ரீ சக்கரம் மந்திரம்

ஸ்ரீ சக்கரம் இருக்கும் இடத்தில் லட்சுமி கடாட்சம் உண்டு)



ஓம் நமோ பகவதி சர்வ மங்களதாயினி
சர்வயந்த்ர ஸ்வரூபிணி சர்வமந்திர
ஸ்வரூபிணி சர்வலோக ஜனனீ
சர்வாபீஷ்ட ப்ரதாயினி மஹா த்ரிபுரசுந்தரி
மஹாதேவி சர்வாபீஷ்ட சாதய சாதய
ஆபதோ நாசய நாசய சம்பதோப்ராபய
ப்ராபய சஹகுடும்பம் வர்தய வர்தய
அஷ்ட ஐஸ்வர்ய சித்திம் குருகுரு
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ

மந்திர உச்சாடணத்திற்கு சிறப்பான நாட்கள்

பௌர்ணமி, அமாவாசை, அட்டமி, ஏகாதசி திதிகள் வரும் நாட்களும், சிறப்பு விரத தினங்களும் மந்திர உச்சாடணத்திற்கு சிறப்பான நாட்களாகும். சூரிய, சந்திர கிரகண நாட்களில் கிரகண வேளையில்உச்சரிக்கப்படும் மந்திரங்கள் ஒன்றுக்கு நூறாக பலனைத்தரும்.