Thursday 28 January 2016

துளசியின் அனுபவ வைத்திய ரகசியம்'

நமது தேசத்தில் இருபத்திரண்டு துளசி வகை உள்ளன.அவற்றில் நாம் பொதுவாக காண்பது நல்துளசி ராமதுளசி கருந்துளசி கிருஷ்ணதுளசி நாய் துளசி கஞ்சாங்கோரை மற்றும் எலுமிச்சம் துளசி,கற்பூரத் துளசி,செந்துளசி,நிலத்துளசி,நீர்த்துளசி,கல்துளசி,முள்துளசி முதலியன.
"ஐயம் வயிறுளைச்ச லஸ்தி சுரந்தாகமும் போம்
பைய சுர மாந்தம் பறக்குங்காண் - மெய்யாக
வாயின ரோசனம் போம் வன்காரஞ்சூடுள்ள
தூய துளசி தனைச்சொல்"
கார்ப்பும்.வெப்பமும் உள்ள துளசியினால் கபதோஷம்,வயிறுளைத்தல்,அஸ்தி , தாகம் மாந்த சுரம், அருசி இவைபோம்
வைணவ கோயில்களில் துளசியினால் மூலவருக்கு அர்ச்சனை செய்வதோடின்றி. இதை தண்ணீர் விட்டு தீர்த்தம் என்று நமக்கு ஒரு உச்சிக்கரண்டி கொடுக்கிறார்கள்.இதனால் என்ன பயன் என்று நாம் சிந்திப்பதில்லை. சுவாமி பிரசாதமென்று பயபக்தியுடன் சாப்பிடுகிறோம். இது என்றோ ஒருநாள்நடப்பது.
ஹிந்துக்கள் வீடுகளில் பொதுவாக பூஜை அறை என்று ஒரு சிறு அறையிருக்கும். இதில் பெருமாள், அம்பாள், முருகர், சிவன், விநாயகர் என பல படங்கள் இருக்கும்.தினம் இங்கு பூஜை செய்த பின்பே மற்றகாரியம் பார்ப்பார்.சைவர்கள் வில்வத்தை கொண்டு அர்ச்சித்தும், வைணவர்கள் துளசி தீர்த்தம் சாப்பிட்ட பிறகே உணவு உன்ன செல்லுவர்.
துளசியின் மருத்துவ குணங்களை ஆராய்ந்தோமானால் நம் முன்னோர்கள் எத்தனை அறிஞர்கள் என்பதை அறியலாம்.
துளசி தீர்த்தத்தை பிரதி தினமும் எப்பொழுதும் தொடர்ந்து சாப்பிடுவர்களுக்கு புற்றுநோய் அணுகாது.
புற்றுநோய் எந்த உறுப்பிலிருப்பினும் துளசி இலை இருபத்தொன்று, மிளகு ஆறு சேர்த்து பசுமோர் விட்டு அரைத்து, காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட குணம் காணலாம்.
குழந்தைகளுக்கு இது ஓர் சஞ்சீவி. குழந்தைகளுக்கு அவ்வப்பொழுது சளி,இருமல்,சுரம் வந்தால் டாக்டர்கள் அந்நோய்க்கு பிரைமரி காம்பளக்ஸ் என்று பெயரிட்டு ஸ்ரெப்டோமைசின் என்ற ஊசிகள் கணக்கின்றி ஏற்றுவர்.
இம்மருந்து உடலில் உள்ள உயிரணுக்களைக் கொன்று இயற்கையில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து விடுகிறது.இச்சிகிச்சை முடிந்த பின்பு டாக்டர்கள் X-Ray படம் எடுத்து பார்த்துவிட்டு நோய் நீங்கியது என்பர்.ஆனாலும் அக்குழந்தைக்கு சளி,இருமல் தொல்லை இருந்த வண்ணம் இருக்கும்.அது மட்டுமின்றி நாளுக்கு நாள் மெலிந்து விடும்.சில குழந்தைகளுக்கு காத்து கூட கேட்பதில் மந்தமாகும்.
குழந்தைகளுக்கு சளி,கபம் அடிக்கடி பிடிக்கும்.இதில் தப்பில்லை. அதற்காக துளசி இலை இருக்கையில் ஊசிகள் ஏன்.
இரவில் ஒரு கோப்பையில் காய்ச்சி ஆறிய தண்ணீர் விட்டு அதில் ஏழு துளசி இலைகளைப் போட்டு மூடி மறுநாள் காலை வெறும் வயிற்றில் வயதுக்கு தக்கவாறு ஒரு பாலாடை முதலி அரை கோப்பை வரையில் கொடுத்துவர அடிக்கடி வரும் ஈளை, இருமல்,சுரம் முதலிய நோய்கள் குணமாவது தவிர அது நோய் தடுப்பு மருந்தாகவும் பயன்படுத்தும்.
துளசி இலைகளை புட்டவியலாக வேக வைத்து சார் பிழிந்து ஒரு தேக்கரண்டியளவு எடுத்து கொஞ்சம் தேன் கூட்டி சுரம்,சளி முதலிய நோய்களுக்கு கொடுக்க இரண்டு வேலைகளிலேயே குணமாகும்.
பிணத்தின் கீழ் மேல் துளசியிலைகளை பரப்பி மூடிவைத்தால் அப்பிணம் இரண்டு மூன்று நாட்டகள் வரை அழுகாது காக்கும் தன்மை பெற்றது.
பிணத்தையே அழுகாது காக்கும் மூலிகை உயிருடன் வாழும் நம்மை காப்பதில் ஐயமுண்டா.
இந்துக்களின் வீடுகளில் துளசி செடியை தொட்டியில் வைத்து பிரதி தினமும் வணங்குவர்.இதை "துளசி மாடம்" என்பர்.நம் மூதாதையர் காலத்திலிருந்து வரும் இப்பழக்கத்தினால் அவர்தம் மருத்துவ ஞானத்தை என்னென்று சொல்லுவது.
ஆங்கில ஆடம்பர மருத்துவம் இந்நாட்டில் முந்நூறு வருடங்களுக்கு முன் நுழைந்தது.அதற்கு முன் நம் முன்னோர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக ஊசியை நம்பித்தான் ஆரோக்கியமாகவும்,அமைதியாகவும் வாழ்ந்தார்களா? சிந்தனைக்குரியது.
நாகரீகம் என்ற பெயரால் அநாகரீகமான பல பழக்கவழக்கங்களை நாம் மேற்கொண்டு பல நோய்களை வருவித்துக் கொள்ளுகிறோம்.நம் மூதாதையர்களை விஞ்ஞானம் தெரிய அஞ்ஞானிகள் என சிலர் எண்ணுகின்றனர்.மக்கள் நல்வாழ்வு வாழ வேண்டுமென்று சிந்திக்கும் வைத்தியம், ஞானம், யோகம் முதலியவைகளை இரவு பகலாக ஓலை ஏடுகளில் நம் மூதாதையர்கள் எழுதி வைத்துள்ளனர்
.
ஆகவே அவர்கள் காட்டிய துளசியை வணங்குங்கள், உபயோகியுங்கள், நீடூழியாய் ஆரோக்கியத்துடன் வாழுங்கள்.
நன்றி.
வர்மக்கலை ஆசான்.எஸ்.கோபாலகிருஷ்ணன்
+919894285755

No comments:

Post a Comment