Sunday 6 December 2020

ஏமாற்று வேலை

 


அனைவருக்கும் வணக்கம் . தற்பொழுது online ல் பலர் தான் மாந்திரிக்கவாதி என்றும் தன்னிடம் பல வித்தைகள் உள்ளது போன்று வீடியோ போடுகின்றனர் . உண்மை என்னவென்றால் அனைத்தும் ஒன்றுக்கும் உதவாத பொய் . சிலர் சித்தர்களின் எந்திரங்களையும் மந்திரங்களையும் போடு கின்றனர் ஆனால் அதன் சூ ற்றுமம் மற்றும் பிரயோகமுறை அவர்களுக்கு தெரிவதில்லை . எல்லாம் அரைகுறை அறிவோடு பதிவிடுகின்றனர் . இவர்களின் முறையை பயன்படுத்தினால் ஒளி தெய்வமாக இருக்கும் பட்சத்தில் (சிவன், முருகன்,பிள்ளையார் போன்ற தெய்வங்கள் ) உடற் சூடு உருவாக்கி பல நோய்களுக்கு வழிவகுக்கும் . இருள் தெய்வங்களாக இருப்பின் ( மாடன் , கருப்பன் ,காளி ,குறளி , குட்டி ) உடல் கருத்து வறுமை உண்டாகும் . தேவதைகளாக இருப்பின் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும் . 1000 பேர் வீடியோவை பார்த்தால் 30 ரூபாய் கிடைக்கும் என்று தவறான தகவல்களை பதிவிட்டு மற்றவர்களின் வாழ்க்கையோடு விளையாடுகின்றனர் .
1. தெய்வ வசியத்திற்கு முதலில் ஏற்கனவே வசியம் செய்து வைத்துள்ள குருவின் தீட்சை தேவை .
2. அந்த தெய்வத்திற்கு உரிய கரு தேவை . அது ஆதி தைலம் , ஐங்கோலம் , வசிய மை முதலியன
3. வசிய போஜன செய்யும் நாள்களில் மது ,மாது ,மாமிசம் தவிர்க்க வேண்டும் .மனைவியை கோடா தொட கூடாது .
தெய்வ வசியம் என்பது ஒருவனது மந்திர உரு அவனது விந்துவில் பதிவாகி காந்தம் போல் தெய்வத்தை ஈர்க்கும் இதுவே உண்மை . மற்றபடி பெண்கள் என்பவர்கள் தீட்டு கிடையாது . இது புரியாமல் பெண்களை தீட்டு என்பது மடமை .
குல தெய்வ அருள் இல்லாமல் மற்ற தெய்வத்தை வசியம் செய்ய இயலாது .
இப்பொழுது சிலர் தெய்வத்தை பிடித்து தருகிறோம் என்று கூறி சில ஆயிரம் முதல் பல லட்சம் வரை ஏமாற்று வேலை செய்கின்றனர்....

கரு - உரு- குறு முறை


வணக்கம் . மாந்திரீகத்தில் 3 முறைகள் உள்ளது .
1. கரு முறை
கரு என்பது மை தைலம் போன்றவை .இம்முறை அசைவம் அஷ்ட கர்மம் ஆடும் மாந்திரீகர்களுக்கு சிறந்தது .இதன் முலம் ஒளி மற்றும் இருள் தெய்வங்களை வசியம் செய்யலாம் . மேலும் ஒரு ஆன்மாவை வசியம் செய்து அதற்கு சக்தியேற்றி தெய்வ மாக்க முடியும் . இதன் முலம் செய்யும் வேலைகளால் நம் கர்மவினை நமது சந்ததியை பாதிக்காது . ஏனெனில் நமது கர்மாவை நாம் வசியம் செய்த தெய்வமோ ஆன்மாவோ ஏற்று கொள்ளும் .
2. குறு முறை
இது வைத்தியர்களுக்கான முறை . இதில் மணி , ரசம் , பாசனம் போன்றவை அடங்கும் . இதன் மூலம் ஒளி தெய்வங்களை மட்டும் வசியம் செய்ய முடியும் .
3.உரு முறை .
இந்த முறையை பலர் பயன் படுத்துகின்றனர் .இதன் மூலம் ஒளி மட்டும் இருள் தெய்வங்களை வசியம் செய்ய முடியும் . ஆனால் இது குடும்பம் நடத்துபவர்களுக்கு உகந்தது அல்ல . காரணம் இதன் மூலம் அஷ்டகர்மம் செய்யும் போது உதாரணமாக அடுத்தவர்களுக்கு களிப்பு கழிக்கும் போது அவரது கர்மா நம்மை வந்தடையும் .இது நம் சந்ததியை பாதிக்கும் .இந்த முறை குடும்பம் இல்லாதவர்களுக்கு மட்டுமே சிறந்தது

Wednesday 2 September 2020

விநாயகர் வசியம்

மூல மந்திரம்

ஓம் ஹராம் ஹிறீ ம்  ஹுரோம் கங்கணபதியே  வர வர சர்வ கணமே வசமாக சுவாகா