Sunday 6 December 2020

கரு - உரு- குறு முறை


வணக்கம் . மாந்திரீகத்தில் 3 முறைகள் உள்ளது .
1. கரு முறை
கரு என்பது மை தைலம் போன்றவை .இம்முறை அசைவம் அஷ்ட கர்மம் ஆடும் மாந்திரீகர்களுக்கு சிறந்தது .இதன் முலம் ஒளி மற்றும் இருள் தெய்வங்களை வசியம் செய்யலாம் . மேலும் ஒரு ஆன்மாவை வசியம் செய்து அதற்கு சக்தியேற்றி தெய்வ மாக்க முடியும் . இதன் முலம் செய்யும் வேலைகளால் நம் கர்மவினை நமது சந்ததியை பாதிக்காது . ஏனெனில் நமது கர்மாவை நாம் வசியம் செய்த தெய்வமோ ஆன்மாவோ ஏற்று கொள்ளும் .
2. குறு முறை
இது வைத்தியர்களுக்கான முறை . இதில் மணி , ரசம் , பாசனம் போன்றவை அடங்கும் . இதன் மூலம் ஒளி தெய்வங்களை மட்டும் வசியம் செய்ய முடியும் .
3.உரு முறை .
இந்த முறையை பலர் பயன் படுத்துகின்றனர் .இதன் மூலம் ஒளி மட்டும் இருள் தெய்வங்களை வசியம் செய்ய முடியும் . ஆனால் இது குடும்பம் நடத்துபவர்களுக்கு உகந்தது அல்ல . காரணம் இதன் மூலம் அஷ்டகர்மம் செய்யும் போது உதாரணமாக அடுத்தவர்களுக்கு களிப்பு கழிக்கும் போது அவரது கர்மா நம்மை வந்தடையும் .இது நம் சந்ததியை பாதிக்கும் .இந்த முறை குடும்பம் இல்லாதவர்களுக்கு மட்டுமே சிறந்தது

No comments:

Post a Comment